ரவுடி மனைவியுடன் எஸ்கேப்பான சின்ராசு! சமயபுரம் கோவிலில் மிரண்ட ஒத்தரோசா! யார் இந்த புல்லட் ராஜா?
திருச்சி : திருச்சி அருகே ஆட்டோ ஓட்டுனர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த புல்லட் ராஜா என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.. உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த கொலை சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த ராமசாமி மகன் சின்ராசு. 41 வயதான இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவிமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜா என்கின்ற புல்லட் ராஜா எனபவருடைய மனைவி கிருஷ்ணவேணிக்கும் சின்ராசுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

முறையற்ற உறவு
சிறிது நாட்களில் புல்லட் ராஜாவின் மனைவியை சின்ராசு தனது வீட்டிலேயே தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்காக புல்லட் ராஜா சின்னராசு மேல் கடும் கோபத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புல்லட் ராஜா கிருஷ்ணவேணியுடன் தனது அக்கா மற்றும் அக்கா கணவருடன் சாமி தரிசனம் செய்ய சின்ராசு ஆட்டோவில் சென்றார்.

கோவிலில் கொலை
இதை அறிந்த புல்லட் ராஜா பின் தொடர்ந்து சென்று சமயபுரம் கோயில் முடிகாணிக்கை மண்டப வளாகத்தில் சின்ராசுவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியது அப்போது புல்லட் ராஜா தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்ராசுவின் கழுத்தில் குத்தியதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சின்ராசு பரிதாபமாக பலியானார்.

மனைவியுடன் மாயம்
உடனே புல்லட் ராஜா அங்கிருந்து மனைவி கிருஷ்ணவேணியை இழுத்துக்கொண்டு தலைமறைவானார். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது.

அதிரடி கைது
மோப்பநாய் லீலி கோயில் மண்ட வளாகத்தில் சிறிது தூரம் சுற்றி வந்து நின்றுவிட்டது. தொடர்ந்து கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், சின்ராசுவின் அண்ணன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தலை மறைவாக இருந்த புல்லட் ராஜாவை சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சின்ராசு கடந்த வருடம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி ஏரியில் லாரி டிரைவர் கொலை வழக்கில் ராஜா என்கின்ற புல்லட் ராஜா கைதாகி சிறை செனறு தற்போது ஜாமீனில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications