ஆன்லைன் வர்த்தகத்தை தொடர்ந்து ஷோரும்கள் மூலம் கால் பதிக்க வரும் பிளிப்கார்ட் !
பெங்களூரு: ஆன்லைன்' வழியாக வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ‘பிளிப்கார்ட்' நிறுவனம் தற்போது இந்தியாவில் ஷோரூம்களை தொடங்கி நேரடி சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இணையவழி பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வலைத்தள நிறுவனம் பிளிப்கார்ட். அவ்வப்போது செல்போன்கள், பேக்குகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை பல அதிரடி தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறது. சமீபத்தில் 'பிக் மில்லியின் டே சேல்ஸ்' என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையின் மூலம் சுமார் 30 கோடி டாலர்கள் அளவுக்கு விற்பனையை குவித்தது. இதில், சுமார் 20 கோடி டாலர்கள் செல்போன்கள் விற்பனை மூலமாக மட்டும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் புதிய ஷோரும்களை திறக்க உள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். அதில் முதல் கட்டமாக செல்போன்களை காட்சிக்கு வைக்கவும் முடிவு செய்துள்ளது. அவற்றை வாங்க விரும்புபவர்கள், தங்களுக்கு தேவையான செல்போன்களை நேரில் தொட்டுப்பார்த்து, அவற்றின் செயல்திறன், வேகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை ஆய்வு செய்து, பின்னர் தங்களது ஆர்டர்களை ‘பிளிப்கார்ட் ஆப்ஸ்' வழியாக முன்பதிவு செய்து, அதே ஷோரூம்களிலோ, அல்லது, வழக்கம்போல் கூரியர் மூலமாகவோ டெலிவரி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் இதுவே மிகப்பெரியதாகும்.
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications