பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து.. 36 பேர் பலி! உத்தரகாண்டில் ஷாக்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 42 பயணிகளுடன் பேருந்து ஒன்று அல்மோராவில் உள்ள மார்ச்சுலா அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற வாகனங்களில் பயணித்தோர் இந்த விபத்தை நேரடியாக பார்த்திருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருடன் போலீசாரும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில் "42 இருக்கைகள் கொண்ட பேருந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்த உடனேயே மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். இந்த பேருந்து நைனிதண்டாவின் கிராத்தில் இருந்து ராம்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மார்ச்சுலா அருகே ஒரு திருப்பத்தில், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்திருக்கிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளார்.
மீட்பு பணிகள் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரகாண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications