குஜராத் தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு.. சொந்த கிராம குழந்தைகளின் கல்விக்காக செய்த தரமான சம்பவம்
அகமதாபாத்: அமெரிக்காவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஒருவர் குஜராத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் இலவச கல்வி பெற வேண்டும் என்பதற்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கல்வி ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு தலைமுறையையே மாற்றிவிடும். அந்த வகையில், அமெரிக்காவில் தொழில் செய்து வரும் மகேந்திரா மேக் படேல் என்பவர் குஜராத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்குவதற்காக ரூ. 100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம், நிஸ்ரயா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் மகேந்திரா மேக் படேல் (86). மகேந்திரா டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவுப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் தொழில் நிறுவனம் ஒன்றை அமைத்து வெற்றிகரமாக அதனை நடத்தி வருகிறார். இவர் தான் பிறந்த ஊரான நிஸ்ரயா கிராமத்தில் அதிநவீன உயர்நிலைப் பள்ளி கட்டும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இப்பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் முறையாக செய்து கொடுக்கும் வகையில் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தனது கிராமத்தைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவர்களின் கல்விக்காக ரூ. 100 கோடி நிதியுதவியையும் அளித்துள்ளார்.
இப்பணிகள் குறித்து கன்சல்ட் ஆண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவரான மகேந்திரா மேக் படேல் கூறியுள்ளதாவது: நிஸ்ரயா கிராமத்தில் உயர்நிலைப் பள்ளிகள் எதுவும் இல்லை. இதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் உயர்நிலைப் படிப்பு படிக்க அருகில் உள்ள கிராமங்கள் அல்லது நகரங்களுக்குத்தான் செல்லும் நிலை உள்ளது.
இந்தியன் வங்கியில் 75 கோடி ரூபாய் வைப்பு நிதி செய்திருந்தேன். அந்தப் பணத்தை தற்போது நிஸ்ரயா கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்திருக்கிறேன். எங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி பெறுவதற்கு சொந்த கிராமத்திலேயே பள்ளி கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அதே சமயம் அவர்கள் அந்த கல்வியை இலவசமாக கற்க வேண்டும் என்றார்.
மகேந்திரா மேக் படேல் தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் 70 பேருக்கு அவர்களின் கல்லூரிப் படிப்புக்காக 30 லட்சம் ரூபாய் நிதி உதவியை கடந்த ஆறு மாதங்களில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் வடிகால் அமைப்பு, சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்து வருகிறார்.
தான் பெரிய தொழிலதிபராக உயர்ந்த போதிலும் பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்தை மறக்காமல் அக்கிராம மக்களின் வளர்ச்சிக்காக தொழிலதிபர் செய்து வரும் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளின் கல்விக்காக ரூ. 100 கோடி நிதியுதவி அளித்துள்ள மகேந்திரா மேக் படேலுக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications