பழங்குடி மக்களின் கல்விக்காக பாடுபடும் கேஐஐடி நிறுவனர் அச்சுதா சமந்தாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
புவனேஸ்வர்: பழங்குடி மக்களின் கல்விக்காக பாடுபட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி (கேஐஐடி) நிறுவனர் அச்சுதா சமந்தாவுக்கு 64-வது கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
கேஐஐடி, கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (கேஐஎஸ்எஸ்) போன்ற உயர்கல்வி நிறுவனங்களை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நிறுவி கல்விச் சேவையாற்றி வருகிறார் அச்சுதா சமந்தா. இன்ஸ்டிடியூட்டின் தலைவராகவும், நிறுவனராகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை இலவச கல்வியை அளித்து சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் பெங்களூரு அலையன்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இது அவருக்குக் கிடைத்துள்ள 64-வது கவுரவ டாக்டர் பட்டமாகும். பெங்களூரு நகரில் நடைபெற்ற அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் அச்சுதா சமந்தாவுக்கு வழங்கப்பட்டது.
கல்வித் துறையிலும், சமூகச் சேவைத் துறையிலும் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருதை அலையன்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியது. இது குறித்து டாக்டர் அச்சுதா சமந்தா கூறியதாவது: சமூகத்தின் முன்னேற்றத்துக்காக கடந்த 33 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறேன்.
இந்த கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கோவா மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, நிதி ஆயோக் உறுப்பினரும், ஜேஎன்யு பல்கலைக்கழக வேந்தருமான பத்ம பூஷண் டாக்டர் விஜய்குமார் சரஸ்வத், கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, கர்நாடக மேலவைத் தலைவர் பசவராஜ் ஹோரட்டி, இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications