ராணுவத்தின் டார்ச்சர்.. போராளி ஆக முடிவு.. ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ வாழ்வில் நடந்த அந்த ட்விஸ்ட்
ஜம்மு காஷ்மீர்: அமரன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமரன் படத்தை போலவே அங்கு மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் தன் இளமை பருவத்தில் ராணுவத்தால் சில கொடுமைகளை அனுபவித்து போராளி ஆகும் முடிவில் இருந்துள்ளார். ராணுவ உயரதிகாரி ஒருவரின் செயல்பாட்டால் எம்எல்ஏ அந்த முடிவை கைவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் வணிக ரீதியாகவும் வசூலை குவித்து வருகிறது.

அமரன் படம் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ அதிகாரியின் பயோ பிக்காக எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய முகுந்த், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடனான மோதலின் போது மரணமடைந்தார். இந்தப் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அமரன் படத்தை பாராட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் அமரன் படத்துக்கு எதிராக விமர்சனங்களும், போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் மண் உரிமைப் போராட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல், அவர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கண்டனங்களும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எம்எல்ஏ ஒருவர், தனது இளமை பருவத்தில் ராணுவ அதிகாரியால் ஏற்பட்ட பாதிப்புகளை பகிர்ந்துள்ளார்.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களை சந்தித்து பேசுவார். அதேபோல அந்த எம்எல்ஏவிடம் ராணுவ உயர் அதிகாரி சிஸ்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. சட்டசபை முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
தேசிய மாநாடு கட்சி சார்பில் லோலப் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் க்கைசர் ஜம்ஷெத் லோன். இவர் எம்எல்ஏவாக பேசிய முதல் உரை வைரலாக பரவி வருகிறது. ஜம்ஷெத், நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் ஊரில் பதற்றமான சூழல் வெடித்தது. என்னுடன் சேர்த்து 32 இளைஞர்களை ராணுவத்தினர் தனியாக விசாரணை நடத்தினார்கள்.
தீவிரவாத குழுவில் இணைந்த இளைஞர் குறித்து ராணுவ அதிகாரி கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட அந்த இளைஞர் எங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரை தெரியும் என்று கூறினேன். அதற்கு அந்த அதிகாரி என்னை அடித்துவிட்டார். தீவிரவாதிகள் குறித்து மேலும் சில கேள்விகளை கேட்டனர். அதுப்பற்றி எனக்கு தெரியவில்லை. இதனால் என்னை மீண்டும் அடித்துவிட்டனர்.
ராணுவத்தினர் தொடர்ந்து செய்த டார்ச்சரை தாங்க முடியவில்லை. அதனால் போராளி ஆகிவிடலாம் என்று நினைத்தேன். அந்த இடத்துக்கு ஒரு ராணுவ உயரதிகாரி வந்து வாழ்க்கையில் உனக்கு என்ன ஆக வேண்டும் என லட்சியம் என்று கேட்டார். அதற்கு நான் போராளி ஆக வேண்டும் என்று கூறினேன். அவர் ஏன் என்று கேட்டதற்கு நாங்கள் சந்திக்கும் இன்னல்களை கூறினேன்.
அவர் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியை அழைத்து அனைவர் முன்னிலையிலும் கண்டித்தார். அவரின் செயல்கள் எனக்கு நம்முடைய சிஸ்டத்தின் மீது நம்பிக்கை உருவானது. இருப்பினும் என்னுடன் விசாரிக்கப்பட்ட 32 இளைஞர்களில் 27 பேர் போராட்டக் குழுவில் இணைந்தனர் என்று கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications