சத்தீஸ்கரில் பாதுபாப்பு படையை குறிவைத்து நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! 9 வீரர்கள் வீரமரணம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர் மாவட்டத்தில் ரிசர்வ் காவலர் படை வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நக்சல்கள் ஐஇடி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 8 வீரர்கள் மற்றும் டிரைவர் என 9 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
இந்தியாவில் நக்சலைட்கள் பிரச்சினை பல காலமாகவே தொடர்கிறது. நக்சலைட்களை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேநேரம் நமது பாதுகாப்புப் படையைக் குறிவைத்தும் நக்சலைட்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது சத்தீஸ்கரில் நடந்துள்ளது.
ஐஇடி தாக்குதல்:
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று இந்த கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. அங்கு மாவட்ட ரிசர்வ் காவலர் படை (டிஆர்ஜி) வீரர்கள் சென்ற வாகனத்தை நக்சல்கள் ஐஇடி வெடிகுண்டு பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளனர்.. பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பெத்ரே-குத்ரு என்ற சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 8 பேர், வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு அதிரடி ஆப்ரேஷனை முடித்துக் கொண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த அனைவரும் டிஆர்ஜி எனப்படும் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்கள் ஆகும். இது அம்மாநில காவல்துறையின் ஒரு பிரிவாகும்.
அதிகாரிகள் சொல்வது என்ன:
இத தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) பஸ்தர் கூறுகையில், "தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் ஆகிய பகுதிகளின் கூட்டு ஆப்ரேஷன்களை முடித்துக் கொண்டு தங்கள் முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அடையாளம் தெரியாத மாவோயிஸ்டுகள் பிஜாப்பூர் மாவட்டத்தின் குத்ரு காவல் நிலையப் பகுதியில் ஐஇடியை வெடிக்கச் செய்தனர். விரைவில் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைப் பகிர்வோம்" என்றார்.
சத்தீஸ்கர் சபாநாயகர்:
இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் சட்டமன்ற சபாநாயகர் டாக்டர் ராமன் சிங் கூறுகையில், "நக்சலைட்டுகளுக்கு எதிராக முக்கியமான ஆப்ரேஷன்களை நடத்தும் போதெல்லாம்.. இந்த நக்சலைட்டுகள் கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் இதனால் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்படாது. தொடர்ந்து சத்தீஸ்கர் அரசும் மத்திய அரசும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும்" என்றார்.
பின்னணி
சத்தீஸ்கரின் பஸ்தாரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 நக்சலைட்டுகள் நேற்றைய தினம் தான் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் நடந்த மறுநாளே இந்த கொடூரம் நடந்துள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை மாலை (ஜனவரி 4) நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் அங்குப் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications