லாட்டரியில் விழுந்த ரூ.125 கோடி.. அதிஷ்டக்காற்று வீசியும் வீணாப்போச்சு.. பரிசு வென்ற நபர் மாயமான மர்மம்
வாஷிங்டன்: லாட்டரியில் ஆயிரம் ரூபாய் அடித்தாலே யாருக்கும் விட மனம் வராது. பரிசு விழுந்தது என்று தெரிந்த ஓரிரு நாட்களில் ஓடிப்போய் பரிசை வாங்கி விடுவார்கள். ஆனால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.125 கோடி என்ற பெரும் தொகை பரிசாக வென்ற நபர், மாயமாகியிருப்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த சுவாரசிய நிகழ்வு குறித்த விவரங்களை பார்க்கலாம்.
லாட்டரியில் யாருக்கு எப்போது பரிசு அடிக்கும் என்று தெரியாது. டிக்கெட் வாங்க கூட காசு இல்லாதவர்களுக்கு கூட, தனி விமானம் வாங்கும் அளவிற்கு ஒரே நாளில் திருப்பம் ஏற்பட்டு விடும். ஆனால் ஒரு சிலருக்கு இப்படி கோடிகள் விழுந்தாலும், கோடிக்கணக்கான பேருக்கு கொடுத்த பணம் கூட திரும்பி வராது.

ரூ.125 கோடி பரிசு
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் இருப்பது போல, பல்வேறு நாடுகளிலும் லாட்டரிகள் உள்ளன. வெளிநாடுகளில் பல நூறு கோடிகள் முதல் பரிசாக கிடைக்கும் என்பதால், சர்வதேச அளவில் கவனம் பெறும் நிகழ்வாக உள்ளது.
சரி, அதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம்... ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான சாகாஸ் லாட்டரியில் 15 மில்லியன் டாலர் பரிசாக ஒருவருக்கு விழுந்தது. ஆனால் பரிசு அடித்ததில் இருந்து அந்த நபர் தலைமறைவு ஆகிவிட்டாராம். இந்திய மதிப்பில் ₹125 கோடி பரிசு விழுந்த நபர் திடீரென மர்மமான முறையில் மாயமாகியிருப்பது, ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புகொள்ள முடியவில்லை
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஈஸ்ட் மெய்ட்லாண்டில் உள்ள ஸ்டாக்லாண்ட் ஷாப்பிங் சென்டரில் உள்ள கிரீன்ஹில்ஸ் நியூஸ் ஏஜென்சியில் இருந்து இந்த லாட்டரி டிக்கெட் வாங்கப்பட்டது. வெற்றி எண்கள் 44, 46, 39, 34, 7, 15 மற்றும் 3 ஆகவும், துணை எண்கள் 24, 19, 13 ஆகும். ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ லாட்டரிகளை நடத்தும் 'தி லாட்' நிறுவனத்தின் அதிகாரிகள், இந்த டிக்கெட் 'தி லாட் உறுப்பினர்கள் கிளப்பில்' பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், வெற்றி பெற்றவரை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஆச்சரியமாக இருக்கிறது
கிரீன்ஹில்ஸ் நியூஸ் ஏஜென்சியின் ஊழியர் டியெர்னா பெர்ரி இது தொடர்பாக கூறுகையில், "இதுவரை நாங்கள் விற்றதிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான். இதை விட அதிகமான பரிசுத்தொகை இதற்கு முன்பு யாரும் வென்றதில்லை. அந்த நபர் விரைவில் தனக்கு $15 மில்லியன் கிடைத்திருப்பதை உணருவார் என நம்புகிறோம்" என்று கூறினார்.
'தி லாட்' நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் காட் மெக்கின்டைர் கூறும் போது, இந்த நிலைமை தங்களை வியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்தார். "ஒருவர் $15 மில்லியன் பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஈஸ்ட் மெய்ட்லாண்டில் டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் எண்களை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் வலியுறுத்தினார்.
இது முதல் முறையல்ல
வெற்றி பெற்ற டிக்கெட்டை வாங்கியவரை அடையாளம் காண, அதிகாரிகள் கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். டிக்கெட் தொலைந்து போயிருந்தால் கூட, நியூ சவுத் வேல்ஸ் லாட்டரி சட்டங்களின்படி, வெற்றியாளர் ஆறு ஆண்டுகளுக்குள் பரிசை உரிமை கோரலாம்.
இந்த பரிசு உரிமைகோராமல் இருந்தால், அந்தப் பணம் மாநில கருவூலத்திற்குத் திரும்பிச் சென்றுவிடும். இத்தகைய பெரிய பரிசுகள் உரிமைகோராமல் இருப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூன் 2025 இல், ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய பவர்பால் ஜாக்பாட் பரிசான $100 மில்லியனும் உரிமைகோராமல் இருந்தது. 'தி லாட்' நிறுவனத்தின் மூத்த அதிகாரி மேட் ஹார்ட், இவ்வளவு பெரிய பரிசுகள் உரிமை கோராமல் போவது மிகவும் அரிது என்று குறிப்பிட்டார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications