டிரம்ப் தலைமையிலான போர் நிறுத்தம் இப்படித்தான் இருக்கும்! காசா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்!
காசா: காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை டிரம்ப் தலையிட்டு நிறுத்தியிருந்தார். உலகின் மிகக் கொடிய போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அவர் பந்தா காட்டிக்கொண்டார். ஆனால் தற்போது காசா மீது இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியிருக்கிறது.
இந்த தாக்குதல் போர் நிறுத்தம் குறித்த நம்பிக்கையை இழக்க செய்திருக்கிறது. தாக்குதல் விவகாரத்தில் இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் குழுவும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த அக்டோபர் 11 அன்று அமெரிக்காவின் தலையீட்டால் இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள், தெற்கு ரஃபாவில் துப்பாக்கிச் சூடு சத்தங்களைக் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். அதேபோல, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள கிழக்கு அபாசான் நகரிலும் இஸ்ரேலிய டாங்கிகளிலிருந்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர். கான் யூனிஸில் வசிப்பவர்கள், அக்டோபர் 19 மதியம் ரஃபாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களை நேரில் பார்த்திருக்கின்றனர்.
இத்தாக்குதல்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் இஸ்ரேலிய அரசிடம் கேள்வியை எழுப்பியுள்ளன. இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர், இராணுவத்தை அணுகுமாறு தெரிவித்தார். ஆனால், இராணுவம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வடக்கு காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில், வடக்கு காசாவின் கிழக்கு ஜபாலியா பகுதியில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் 47 முறை அத்துமீறல் செய்திருக்கிறது. இதன் விளைவாக 38 பேர் இறந்துள்ளதாகவும், 143 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா அரசு தெரிவித்திருக்கிறது. "இந்த மீறல்கள் பொதுமக்களை நேரடியாக சுடுவது, வேண்டுமென்றே குண்டு வீசுவது, இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது, அத்துடன் பல பொதுமக்களை கைது செய்வது எனப் பலவற்றை உள்ளடக்கியது" என்று காசா தெரிவித்திருக்கிறது.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications