மலேசியாவில் வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 104 ஆண்டுகள் சிறை, 18 பிரம்படி!
கோலாலம்பூர்: வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 18 பிரம்படிகள் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியா நாட்டின் சிபு நகரின் ஜாலான் சலிம் பகுதியில் வசிக்கும் 15 வயது மற்றும் 16 வயது நிரம்பிய இரு பெண் குழந்தைகளை, அவர்களது வளர்ப்புத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தங்களது வீட்டில் தங்களுக்குப் பாலியல் கொடுமை இழைக்கப்பட்டதாக 15 வயது மற்றும் 16 வயது நிரம்பிய இரு பெண்களும் தங்களது தாயிடம் கூறினர்.

வளர்ப்புத் தந்தை, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அவர்கள் முறையிட்டனர். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இது குறித்து புகார் செய்யப்பட்டு, மறுநாள் மாலை 4.25 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தம் மீது சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவர், மீண்டும் அத்தகைய குற்றத்தில் ஈடுபட மாட்டேன் என்றும் அதனால் தமக்குக் கருணை காட்டுமாறும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். குற்றவாளி விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது.
அவருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை நீதிபதி முஸ்யீரி பீட் விதித்தார். வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 18 பிரம்படிகள் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அந்த நபரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
பாதுகாப்பு கேட்டு போலீஸுக்கு போனா..போலீஸ்கிட்ட இருந்தே பாதுகாக்கனும் போல! எக்குத்தப்பு SI-க்கு பாடம் -
மூக்கு சிகிச்சை.. பறிபோன உயிர்! மயக்க மருந்தால் மங்கிய கனவு! சொந்த ஊருக்கு சென்ற நர்சிங் மாணவி உடல்! -
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications