வைபவ் சூர்யவன்ஷியை இப்படி விமர்சிக்கலாமா.. தரக்குறைவாக பேசிய ஆர்சிபி வீரர்! இதெல்லாம் ஒரு பிரச்சனையா
மும்பை: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஜித்தேஷ் சர்மா 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை தரக்குறைவாக பேசி விமர்சித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தொழில்முறை கிரிக்கெட்டருக்கான ஒழுங்குடன் நடக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜித்தேஷ் சர்மா, இரவு நேரத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை சாடியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. இம்முறை ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் தலைமையில் களமிறங்க உள்ளது. இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மீதுதான் ரசிகர்களின் கண்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டிலேயே மிகப்பெரிய சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இன்னும் மெருகேறி இருக்கிறார்.

இதனிடையே இந்திய ஏ அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாடிய போது, அவரின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்பட்டார். வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரின் போது ஜித்தேஷ் சர்மா அவுட்டாகி இந்திய அணியை தோல்வி அடைய வைத்தார். அப்போது ஓய்வறையில் நின்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி சரமாரியாக ஜித்தேஷ் சர்மாவை திட்டினார்.
இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஜித்தேஷ் சர்மா பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தொழில்முறை கிரிக்கெட் வீரராக வளரவில்லை. அவர் இன்னும் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று அவரை சுற்றி இருப்பவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் வைபவ் சூர்யவன்ஷியின் குணங்கள் அவ்வளவு எளிதாக மாறாது என்றே நினைக்கிறேன்.
களத்தில் இருக்கும் போது வைபவ் சூர்யவன்ஷி ஒழுக்கத்துடன் இருக்கிறார். அதனை பற்றி நான் பேசப் போவதில்லை.. ஆனால் இரவு நேரத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கொஞ்சமாக ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்பதை உணர்வார்.
ஆனால் 15 வயது சிறுவனாக இருக்கும் போதே வைபவ் சூர்யவன்ஷியிடம் சீனியர் வீரர்களுக்கு நிகரான ஃபிட்னஸ் மற்றும் டயட் கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஜித்தேஷ் சர்மாவின் விமர்சனத்தை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அவர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications