For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
புயற்காற்று
ஒரு கணவனும், மனைவியும்
மனைவி: காற்றடிக்குது,கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத் தடிக்குது, பள்ளியிலே .
கண்ணை விழிப்பாய் நாயகனே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத் தடிக்குது, பள்ளியிலே .
கணவன்: வானம் சினந்தது ; வையம் நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.
மனைவி: நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே. இந்த
நேர மிருந்தால் என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மைக்
காத்தது தெய்ய வலிமை யன்றோ!
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]