சவூதி இந்திய தூதரக தலைமை உயரதிகாரிக்கு தம்மாமில் சிறப்பான வரவேற்பு
பிற வளைகுடா நாட்டு இந்திய துதரகங்களைக் காட்டிலும் சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகமானது சவாலான பணிகளை குறைந்த வசதி வாய்ப்புகளுக்கு மத்தியிலும் சிறப்பாக வழங்குவதாக பெருமிதப்பட்டனர்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தூதரக அதிகாரிகள் சுமார் 20 லட்சம் இந்தியர்களுக்கு பெரும் நிலப்பரப்பில் ஒவ்வொரு நகருக்கும் சென்று அளிக்கும் அலுவல் பணிகள் பாராட்டுதலுக்குரியவை. ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் எண்ணிக்கை கொண்ட கடவுச் சீட்டுகள் புதுப்பித்தல் பணி விரைவானதும் மிகச் சிறப்பானதும் ஆகும்.
உங்களுடைய தலைமையில் மேலும் சிறப்பான சேவையை இந்திய தூதரகம் வழங்க சவூதி கிழக்கு பிராந்திய இந்திய சமூகம் எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு சமூக நல அமைப்பு கோரியது. திரு. சிபி ஜார்ஜ் அவர்களை தமிழ் சமூக பிரமுகரும் தம்மாம் பன்னாட்டு இந்திய பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினருமான திரு. திருநாவுக்கரசு, தம்மாம் தமிழ்நாடு சமூக நல அமைப்பின் தலைவர் திரு. அப்துல் சத்தார், பொதுச் செயலாளர் சுரேஷ் பாரதி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.வெங்கடேஷ், திரு.பழனி, பொறியாளர் திரு.நவுஷத், திரு. ஃபாரூக் ரஜா, திரு. பாபு, திரு.டைட்டஸ், திரு. ராஜேந்திரன் திரு. ராபர்ட் ஜெரோம், திரு. ஆன்டணி, திரு. கிருஷ்ணன், திரு. மனோ திரு. ஃபயாஸுர் ரஹ்மான், திரு. ஜோஸ் ஆகியோர் சந்தித்தனர்.