துபாயில் நடைபெற்ற இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி
துபாய்: துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு தினங்கள் டிரேடர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
கண்காட்சியினை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் திறந்து வைத்தார். அவர் தனது உரையில் அமீரகம் மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்திற்கு இந்திய கன்சுலேட் உதவிகரமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா குமரையா இந்திய துணிகளின் மீது குறிப்பாக காட்டன் துணிகளின் மீது அமீரகம் அதிக ஆர்வம் கொண்டுள்ளது என்றார். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சிக்கு வந்திருக்கும் விற்பனையாளர்களுடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
டெக்ஸ்பிராசில் இணை இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.

இந்தியாவைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றன. குறிப்பாக தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த ஆதித்யா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இக்கண்காட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம், காட்டன் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில், இந்திய தூதரகம், மற்றும் கன்சுலேட் ஆகியவற்றின் ஆதரவுடன் இக்கண்காட்சியினை நடத்தியது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications