என்செய்வோம்!
அலைகடலே! ஆழித் தீயே!
அடங்கிவிட்டதா, உனது ஆனைத் தீ?
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
கடற்கரை மணல்வெளி எங்கும் இப்போது
கல்லறைத் தோட்டங்கள்
நிறைவேறிவிட்டதா, உனது நெடுநாட் கனவு?
பால்கொடுத்த கொங்கைகளும் பால்குடித்த மழலைகளும் மால்முடித்த மீனவ மறவர்களும் மரணத்தை நொடிப்பொழுதில் முத்தமிட வைத்தாய்! மா ரணத்தை எம் மனத்தில் ஆழப் பதித்தாய்! தீர்ந்துவிட்டதா, உனது தினவு? மூச்சடக்கி முத்தெடுத்தவர்தம் மணிமார்பங்கள் காற்றோடு இசை கலந்து - எம்மைக் உன்னை நாங்கள் "அன்னை" என்றல்லவா தினந்தோறும் எம்மைத் தாலாட்டிய உனக்குத் கலையார்வம் மேலிட, பாழும் கடலே! பாதகியே! முட்டமும் பள்ளமும் மணக்குடியும் குளச்சலும் முன்பொருநாள் முட்டத்தைச் போர்க்குணம் வாய்ந்த எங்கள் இரத்த நாளங்கள் மீது இரக்கமற்ற அரக்கியே! துதிபுரிந்த எம்மவர்க்கே "செல்லப் பிள்ளை"யென்று நாங்கள் இயற்கையின் சீற்றமாம் இது. ஐயகோ! - தொ. சூசைமிக்கேல்([email protected]) இவரது முந்தைய படைப்பு: 1. திருக்குறள்
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |