For Daily Alerts
Just In

இல்லாத ஒன்றை
இல்லாத ஒன்றைத் தேடி
நில்லாத உலகில் ஓடி
செல்லாத இடங்கள் நாடி
கல்லாத பாடம் கற்றோம்
பொல்லாத எண்ணம் பெருகி
பொன்னான பொழுதை இழந்து
பொருந்தாத வேடம் புனைந்து
புதிதாக எதனைக் கண்டோம்
சொல்லாத எண்ணம் கோடி
சொன்னாலும் கேட்போர் இன்றி
புதைக்கின்றோம் நெஞ்சினுள் மூடி
புரியாதோ வாழ்வின் மந்திரம்
கொல்லாத உணர்வின் ஏக்கம்
கொள்கின்ற நிஜத்தில் மறையும்
கூட்டியும் கழித்தும் பார்க்கும் கணக்கு
சரியாய் முடியுது எரியும் சிதையில்
-சக்தி சக்திதாசன்ssakthi@btinternet.com
Comments
Story first published: Saturday, April 12, 2008, 12:37 [IST]