அருவி தமிழ் ஆய்வு மையம்
கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005
மதுரையில் தமிழ் ஆய்வு மையம் ஒன்று இப்புத்தாண்டில் (2005) உருவாக்கப்பட்டுள்ளது. என்பதுஅதன் பெயர். அருவி பதிப்பகத்தின் முயற்சி இது.
தமிழில் ஆய்வு பெருகி வளராத துறைகளில், கருத்தையும் கவனத்தையும் உருவாக்குவது அருவி தமிழ் ஆய்வு மையத்தின்நோக்கம்.
ஒருங்கிணைப்பும், ஊக்கமும் பெறாத சிறிய முயற்சிகள் - அடையாளமும் அங்கீகாரமும் அற்ற எளிய திறமைகள் - கால் ஊன்றிநிற்க நம்பகமான மேடை . மதுரையும் சென்னையும் ஆய்வு மையத்தின் களங்களாக இருக்கும்.
என அருவி தமிழ் ஆய்வு மையத்தின் கனவுகள் வளர்கின்றன.
முதல் கட்டமாக 2003, 2004ல் தமிழில் வெளியான மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, புதிய சிந்தனைக் களங்கள் தொடர்பானசிறந்த விமர்சன, ஆய்வு நூல்களைத் (10 நூல்கள்) தேர்ந்தெடுத்து, ஆய்வாளர்களும் பொதுமக்களும் பங்கேற்கும் விரிவானகூட்டத்தில் நூல்களை அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு நூலுக்கும் சுடர் ஆய்வுப் பரிசு ரூ.3000 வழங்க திட்டமிட்டுள்ளது.
அச்சேறாத கையெழுத்து, தட்டெழுத்துப் பிரதிகளும் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கத் தகுதியியானவையே. நூல்கள் அனுப்பவிரும்புவோர், இரு பிரதிகளை 15.4.2005க்குள் முனைவர் ச. மாடசாமி, 24, தேவ் அபார்ட்மெண்ட்ஸ், 7, கஸ்தூரிபா நகர் முதல்மெயின் ரோடு, அடையாறு, சென்னை - 20. (தொ.பே: 044-24401662) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
-------------------------------------
போப்பு எழுதிய நாளைக்கு மழை பெய்யும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா மார்ச் 6ல் ஒசூரில் நடைபெற்றது. தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய இவ்விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமார்,பிரளயன், லட்சுமணப்பெருமாள், பவா. செல்லத்துரை, ஷாஜகான், பொன்ஸீ, க.சீ. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெளியீடு: விகடன் பதிப்பகம்
விலை: ரூ.70
-------------------------------------
பாரதி புத்தகாலயத்தின் சேலம் கிளையான பாலம்- தி புக் மீட் தொடக்க விழா பிப்ரவரி 27ல் நடைபெற்றது. எழுத்தாளர்கள் பாலா,திலகவதி, சிற்பி, க.வை. பழனிச்சாமி, கோணங்கி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புத்தகங்களுக்கு, சகஸ்: 9443222007
-------------------------------------
பிப்ரவரி 27 மாலை திலகவதியின் நாவல்கள் (2 தொகுதிகள்) வெளியீட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் பாலா,சிற்பி, தமிழ்நாடன், இயக்குநர் பாலுமகேந்திரா, சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவுடையான் பாடல்களின்ஒலிப்பேழையும் வெளியிடப்பட்டது.
புத்தக வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை.
(வாசகர்கள் தங்கள் பகுதியில் நடந்த, நடைபெறுகிற நிகழ்வுகளை புதுவிசையில் பதிவு செய்யலாம்)
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications