செருப்பால் யாரையும் அடிக்காதீங்க... அப்புறம் வாழ்க்கையில ஜெயிக்கவே முடியாது
செருப்பு மேட்டர்தான் இப்போது ஹாட் டாபிக். எம்எல்ஏவின் செருப்பை எடுத்துச்சென்ற தலித் நிர்வாகி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
சென்னை: ராமரின் பாதுகைதான் 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் ஆட்சி செய்திருக்கிறது. நமது பாதத்தை கல்லிலும் முள்ளிலும் இருந்து பாதுகாக்கும் செருப்பினை நாம் பாதுகாப்பாக வைத்திருந்தால் நம்முடைய செல்வம் பெருகுமாம். மாறாக நாம் யாரையாவது செருப்பால் அடித்தாலோ செருப்பால் அடிப்பேன் என்று சொன்னாலோ, நம்முடைய செருப்பை அடுத்தவர்களை தூக்க வைத்தாலோ நம்முடைய செல்வம் செல்வாக்கு எல்லாம் செருப்பால் அடிபட்டவர்களுக்கும், நம்முடைய செருப்பை தூக்கிக்கொண்டு நடந்தவர்களுக்கும் போய் விடுமாம்.
செருப்பு மேட்டர்தான் இப்போது ஹாட் டாபிக். எம்எல்ஏவின் செருப்பை எடுத்துச்சென்ற தலித் நிர்வாகி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். எம்எல்ஏ மீதோ, தலைவர் மீதோ யாராவது செருப்பை வீசினால் அவரைப் பற்றி செய்திகள் வைரலாகும். நம்முடைய செய்தியும் செருப்பு பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்திதான்.
இந்துக்களுக்கு பாதுகை புனிதமானது. எனவேதான் பல கோவில்களிலும் நினைவு இல்லங்களிலும் பாதுகைகளை வணங்குகின்றனர். அந்த பாதுகை கட்டைகளில் செய்யப்பட்டிருக்கும். இன்றைக்கும் பல பணக்காரர்களின் வீட்டில் விலை உயர்ந்த செருப்பை வரதட்சணையாக வாங்கும் வழக்கம் உண்டு. சிலர் வீட்டில் மகாலட்சுமியின் பாதுகைகளை வரைந்து வைத்திருப்பார்கள். பகவான் கிருஷ்ணரின் பாதுகையை வீட்டில் வரைந்து வைத்திருப்பார்கள்.

செருப்பு முக்கியத்துவம்
கோவிலுக்கு போனாலோ, கல்யாண வீட்டிற்குப் போனாலோ நினைப்பு எல்லாம் நம்முடைய செருப்பு மீதுதான் இருக்கும். ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கின செருப்பு யாரும் தூக்கிட்டு போயிடக்கூடாதே என்றுதான் நினைப்பு வரும். நம்முடைய செருப்பு தொலைந்து போனால் நம்முடைய தோஷங்களும் தொலைந்து போய் விட்டதாக கூறுவார்கள். அதே நேரத்தில் நம்முடைய செருப்பு தொலைந்தாலோ நம்முடைய செல்வமும் செல்வாக்கும் தொலைந்து போகுமாம்.

மகாவிஷ்ணு அம்சம்
நம்முடைய பாதங்களில் மகாலட்சுமி, மகாவிஷ்ணும் வாசம் செய்வதாக ஐதீகம். நாம் போட்டிருக்கும் செருப்பானது, நம்முடைய பாதங்களுக்கு மட்டும் பாதுகாப்பு அல்ல. நம் பாதங்களில் வசிக்கும் விஷ்ணு பகவானுக்கும், மகாலட்சுமிக்கும் பாதுகாப்பை கொடுக்கிறதாம். எனவேதான். எனவேதான் நம்முடைய செருப்பை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

செருப்பு அதிர்ஷ்டம் யாருக்கு
இரண்டு செருப்பையும் ஜோடியாக கழற்றி விட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். நம்முடைய செருப்பை நாம் பத்திரமாக வைத்துக்கொண்டால் நமக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். யாரையாவது நாம் செருப்பால் அடித்தால் நம்முடைய அதிர்ஷ்டம் நம்மிடம் செருப்பால் அடி வாங்கியவருக்கு சென்றுவிடுமாம். செருப்பால் அடி வாங்கியவர் உயர்ந்த நிலைக்கு சென்று விடுவார். செருப்பால் அடித்தவர் தாழ்ந்த நிலைக்கு சென்று விடுவாராம்.

எட்டி உதைக்காதீங்க
நாம் யாரையும் காலால் மிதிக்கக் கூடாது யாரையும் எட்டி உதைக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நம்முடைய பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் நம்மிடம் மிதி வாங்கியவர்களிடம் சென்று விடுவார்களாம். அதே போல நம்முடைய செருப்பை யாரையும் தொட விடுவதுகூட தவறுதான். செருப்பு சாதாராண மேட்டர் இல்லை என்று இப்போது புரிந்திருக்குமே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications