பிள்ளையாருக்கு பிடித்த எளிமையான எருக்கம்பூ மாலை - என்னென்ன பலன்கள்
எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதன் மூலம் தடைகள் நீங்குவதோடு, சூரியனின் அருளும், ஆத்ம பலனும், ஆரோக்கியமும் நமக்குக் கிடைக்கும்.
சென்னை: மணம் மிக்க எத்தனையோ மலர்கள் இருந்தாலும் விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர். அர்க்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடிதான். எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதன் மூலம் தடைகள் நீங்குவதோடு, சூரியனின் அருளும், ஆத்ம பலனும், ஆரோக்கியமும் நமக்குக் கிடைக்கும்.

எருக்கன் செடிகளில் பல வகைகள் உண்டு. எருக்கம் பூ செடிகள் அனைத்தின் பாகங்களும் ஏதேனும் மருத்துவ பயன்பாடு நிச்சயம் உள்ளது. மருத்துவ பயன்கள் மட்டுமின்றி இறை வழிபாட்டிற்கும் சிறந்த மலராக எருக்கன் பூ திகழ்கின்றது. "தெய்வீக மூலிகை" பெருமையுடன் விளங்கும் எருக்க பூவில் ஒன்பது வகைகள் உள்ளனவாம். அதில் நமது கண்ணில் அதிகம் படுபவை கத்தரிபூ நிற எருக்கம் செடிதான். அதற்கடுத்து பிரபலமான வெள்ளெருக்கு எனப்படும் வெள்ளை நிற பூ மலரும் எருக்கஞ் செடி, இவையிரண்டும் அதிகமாக பயன்படுகிறது.
விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர். காலையில் வெள்ளெருக்கம் பூவை கொண்டு பூஜை செய்தால் நல்ல பலனை பெறலாம்.

சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும். அனைவரும் எனிதாய் வணங்கும் விநாயகரை சாதாரணமாய் பூத்து கிடக்கும் எருக்கம் பூ வைத்து வழிபட்டாலே அனைத்து அருளும் வழங்குவார்.
எருக்கஞ்செடி என்றாலே அந்த காலத்திலெல்லாம் வீட்டில் வளர்த்தால் அபசகுணம் என்று கூறுவார்கள். நாம் வாழும் வீட்டில் எருக்கஞ்செடி வளர்ந்தால் அபசகுணம் என்று நம் முன்னோர்கள் கருதுவார்கள். ஆனால் திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோவில்களில் எருக்கஞ்செடியானது தலமரமாக இருக்கின்றது.

தெய்வீக மூலிகை பெருமையுடன் விளங்கும் எருக்க பூவில் ஒன்பது வகைகள் உள்ளனவாம். அதில் நமது கண்ணில் அதிகம் படுபவை நீல நிற எருக்கம் செடிதான். அதற்கடுத்து வெள்ளெருக்கு எனப்படும் வெள்ளை நிற பூ மலரும் எருக்கஞ் செடி, இவையிரண்டும் அதிகமாக பயன்படுகிறது.
வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் வரை நீர் இல்லாமல் வாழும் தன்மையுடையது. எருக்கஞ்செடியில் இரண்டு வகையான எருக்கஞ்செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றது. நீல எருக்கு, வெள்ளை எருக்கு. வெள்ளை எருக்கஞ்செடி அதிக இடங்களில் வளர்வதில்லை. நீல எருக்கஞ்செடியை அதிக அளவில் காணப்படுகின்றது. எருக்கஞ்செடியில் உள்ள முற்றிய காய்கள் வெடித்து அதில் உள்ள பஞ்சுகள் ஆங்காங்கே சிதறி மண்ணில் புதைந்து அதிலிருந்து மற்றொரு எருக்கஞ்செடி முளைக்கின்றது. யாருடைய உதவியும் இல்லாமல் தன் இனத்தை தானே வளர்த்துக் கொள்வது எருக்கஞ்செடி.
வீட்டில் இருக்கும் வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் அவசியம் இல்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை ஆகியவற்றை சூட்டுவதோடு, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசி வழிபட்டால், வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.
சிவபெருமானுக்கு விருப்பமானது எருக்கம்பூ என்று நாயன்மார்கள் சிலர் போற்றியிருக்கிறார்கள். மேலும் அது தேவ மூலிகை என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும். எருக்கன் செடி வீட்டில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும் தீய சக்திகள் வீட்டை அணுகாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications