திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் துலாபாரம் கொடுத்து வழிபட்ட ராதிகா சரத்குமார்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சரத்குமார்,ராதிகா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து துலாபாரம் கொடுத்து வழிபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சமக தலைவர் சரத்குமார், தனது மனைவி ராதிகா பேரன் பேத்திகளுடன் வந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பேரக் குழந்தைகளுக்கு அரிசி, வெல்லம் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.

Recommended Video

    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் துலாபாரம் கொடுத்து வழிபட்ட ராதிகா சரத்குமார்

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் திருகோவில் பிள்ளை வரம் தரும் கோவிலாகும். இந்த ஆலயத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடைபெறுவது சிறப்பு. இந்த யாகத்தில் குழந்தை வரம் வேண்டியும், சுகப்பிரசவம் வேண்டியும் இந்த யாகத்தில் பலரும் பங்கேற்று வழிபட்டு வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்த பிறகு துலாபாரம் கொடுத்தும் தொட்டிலில் குழந்தைகளை வைத்தும் சுற்றி வருவார்கள்.

    இந்த ஆலயத்திற்கு சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தனது மனைவி, பேரன் பேத்திகளுடன் வந்து சாமி தரிசனம் செய்து துலாபாரம் கொடுத்தனர்.

    ராதிகா, சரத்குமார்

    ராதிகா, சரத்குமார்

    முல்லைவன நாதரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் கர்ப்பரட்சாம்பிகையை அம்பாளை தரிசனம் செய்தனர். அப்போது எடைக்கு எடை அரிசி வெல்லம் வைத்து பேரக்குழந்தைகளுக்கு துலாபாரம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் அவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராதிகா மகிழ்ச்சி

    ராதிகா மகிழ்ச்சி

    செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா, கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு 29 ஆண்டுகளாக நாங்கள் வருகிறோம். இந்த ஆண்டு எனது மகள், மருமகன் பேரக்குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து அம்பாளை தரிசனம் செய்தோம். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டு காலமாக கோவிலுக்கு வர முடியாமல் இருந்தது. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.

    வேண்டுதல் நிறைவேற்றம்

    வேண்டுதல் நிறைவேற்றம்

    செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மனைவி, மகள், பேரக்குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறோம். நேர்த்திக்கடன் இருந்தது அதை இப்போது நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.

    கோவிலில் அரசியல்

    கோவிலில் அரசியல்

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிலுக்கு வந்து அரசியல் பேசக்கூடாது. இன்னும் 15 நாட்கள் கழித்து சென்னையில் நடைபெறும் விழாவில் உங்களின் கேள்விற்கு பதில் அளிக்கிறேன் என்று கூறினார் சரத்குமார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+