75 கி.மீ தூரம் சாலையை வெறும் 105 மணி நேரத்தில் அமைத்து அசத்திய இந்தியா.. கின்னஸ் சாதனை!
மும்பை: 75 கிலோ மீட்டர் சாலையை 105 மணி நேரத்துக்கு அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனையை படைத்து இருக்கிறது.
இந்தியாவின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 75 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலை 105 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனை படைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டது.

இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியிலிருந்து அகோலா நகர் வரை NH 53 தேசிய நெடுஞ்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் தங்களுடன் இணைந்து பணியாற்ற ராஜ்பாத் இன்ப்ராகான் என்ற தனியார் ஒப்பந்ததாரரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தேர்ந்தெடுத்தது.
திட்டமிட்டடி கடந்த ஜூன் 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பார்க்காமல் குறித்த நேரத்துக்குள் சாலையை அமைக்க வேண்டும் என்று முழு மூச்சுடன் பணியாற்றினர். தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் நேர்த்தியான திட்டமிடல் காரணமாகவும் நேற்று இந்த பணிகள் நிறைவடைந்தன.
அதன்படி வெறும் 105 மணிநேரம் 33 நிமிடங்களுக்கு உள்ளாக 75 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நெடுஞ்சாலை அமராவதி முதல் அகோலா நகர் வரை அமைக்கப்பட்டது. இதனை உலக சாதனையாக அங்கீகரித்த கின்னஸ் நிறுவனம் சான்றிதழையும் வழங்கி கவுரவித்து இருக்கின்றது.
கொல்கத்தா, ராய்பூர், சூரத், நாக்பூர், அகோலா, துலே உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையை சுற்றிலும் கனிம வளம் நிறைந்த பகுதிகள் உள்ளன.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications