விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், விஜய் தலைமையிலான அரசியல் கட்சியும் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக அவர் தனி விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்டதாக கூறப்பட்ட ஒரு சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது.
விமானப் பயணத்தின் போது விஜயின் கைப்பையில் இருந்து கத்திரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனால் விமான பணியாளர்கள் அவரை சில மணி நேரம் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியானது. அதோடு, அவருடன் பயணம் செய்த ஆதவ் அர்ஜுனா கைப்பையில் மது பாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக மறுத்து விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில், விஜயின் கட்சியில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் அளித்த பேட்டி இன்னும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அந்த பேட்டியில் அவர், "விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாது, பொதுக்கூட்டங்களிலும் அவர் குடித்துவிட்டு தான் பேசுவார்" என்று கூறியதாக செய்திகள் பரவின. இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
அனு மோகன் பகிர்ந்த அனுபவம்
இந்த சூழலில், விஜயுடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகர் அனுமோகன் ஒரு பழைய பேட்டியில் கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போ எல்லாம் நான் அதிகமா சிகரெட் பிடிப்பேன் இப்போ நான் அதை விட்டு விட்டேன். அந்த நேரத்தில் விஜய் அந்த வழியாக வந்தார்.
என்னைப் பார்த்ததும் உடனே திரும்பி சென்றார். என்னாச்சு என்று கேட்டபோது, "அண்ணே, நீங்க சிகரெட் பிடிச்சிட்டு இருக்கீங்க... அந்த வாசனை எனக்கு ஒத்துக்காது" என்று மிகவும் மரியாதையாகச் சொன்னார். அதற்குப் பிறகு, "இது உடலுக்கும் நல்லது இல்ல... முடிந்தவரைக்கும் விட்டுருங்க" என்று அக்கறையோடு அறிவுரை கூறியதாக அனு மோகன் தெரிவித்தார்.
ரசிகர்கள் கருத்து
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விஜய் மீது வந்த குற்றச்சாட்டுகளுக்கு இது ஒரு பதிலடி என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
"புகை, மது போன்ற பழக்கங்களையே தவிர்க்கச் சொல்லும் மனிதர்... அவர் மீது இப்படி குற்றச்சாட்டு வருவது நியாயமா?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சைகளும், ஆதரவும்
ஒருபக்கம் அரசியல் பிரவேசம் காரணமாக அதிக கவனத்தில் இருக்கும் விஜய், மறுபக்கம் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். ஆனால், அவருடன் பணியாற்றியவர்கள் பகிரும் அனுபவங்கள் ரசிகர்களிடையே அவருக்கான நல்ல பெயரை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்கிறது.
இப்போது பரவி வரும் இந்த அனு மோகன் பேட்டி, "விஜய் நிஜத்தில் எப்படிப்பட்ட மனிதர்?" என்ற கேள்விக்கு ரசிகர்கள் மனதில் ஒரு வேறு கோணத்தை உருவாக்கியுள்ளது.
-
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications