நெற்றியில் பூசும் விபூதி.. இத்தனை ஸ்பெஷலா? ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கும் திருநீறு.. பாருங்களேன்
சென்னை: அறிவியல் சார்ந்த எத்தனையோ விஷயங்கள், காலப்போக்கில் ஆன்மீகம் என்ற வரையறைக்குள் நின்றுவிட்டது.. இதனால் அறிவியல் புறம்தள்ளப்பட்டு, ஆன்மீகம் முன்நின்றதால், சில விஷயங்கள் மறைந்தேவிட்டன.. மேலும் சில விஷயங்களை நாம் அறியாமலேயே விட்டுவிட்டோம்.. அவைகளில் ஒன்றுதான் விபூதி.
விபூதிக்கு நிறைய பெயர்கள் உள்ளன.. இரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், திருநீறு இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதை தயாரிக்கும் முறை எளிதானதுதான்.. ஆனால், அவ்வளவும் ஆச்சரிய பலன்களை தரக்கூடியது.
எப்படி தயார் செய்கிறார்கள்: பசுமாட்டு சாணத்தை எரித்துதான் திருநீறு தயார் செய்யப்படுகிறது.. மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு சாணம் போடும்..
மாட்டு சாணம்: அந்த சாணத்தை தீயிலிடப்படும்போது, ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலுக்கு நம்முடைய நன்மையை தருகிறது. பசு மாட்டுச்சாணத்தை எரித்து ஏன் திருநீறு செய்யப்படுகிறதென்றால், மாடு அருகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு, தனது உடலை நல்ல உடற்சக்தியுடன் வைத்திருக்கிறது... இது இடும் சாணத்தை தீயிலிடும்போது ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையாக அமைகிறது.

நீறு இல்லா நெற்றி பாழ் என்று ஒரு பழமொழியே உண்டு.. இதை தெய்வீக விஷயமாக பார்க்கப்படுவதால், எதற்காக நெற்றியில் திருநீறு வைக்கிறோம் தெரியுமா? நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்வது எதிர்மறை ஆற்றல்கள் அல்லது தீய எண்ணங்கள் அல்லது தீயசக்திகளை நம்மிடம் நெருங்க விடாது. மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாக கருதப்படுகிறது. 2 புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன..
சூரியக்கதிர்கள்: நெற்றியில் சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே நரம்புகள் தூண்டப்பட்டு, திருநீறு அணிந்த கொள்வதற்கான சரியான பலன் கிடைக்கும்.. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது.. உள்இழுக்கவும்படுகின்றது... சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் பூசுகிறார்கள். அதனால்தான் முன்னோர்கள் நீறு இல்லா நெற்றி பாழ் என்று எழுதிவைத்தார்களாம்..
விபூதியை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீருகிறது.. அதனால்தான், கிராமங்களில் பிறந்த குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டியதும், உச்சந்தலையில் விபூதி வைப்பார்கள்... இதனால், அந்த விபூதி தலையில் இருக்கக் கூடிய ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும்..
அதிர்வுகள்: திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மை உடையது.. எனவே, உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அந்த இடங்களிலெல்லாம் வலிமை அதிகமாகும் என்கிறார்கள்.. திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.
தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம்முடைய உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் திருநீறு பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.. இதனால், எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும் என்கிறார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications