மத்திய அரசு வேலை.. நல்ல சம்பளம்.. 10th, 12th படித்திருந்தால் போதும்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சென்னை: மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேல் பிரிவு கிளார்க் (UDC), ஸ்டெனோகிராபர் (Steno) மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) பணிகளில் 3800-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன.
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேல் பிரிவு எழுத்தர் (UDC) பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் (ஸ்டெனோ) பதவிக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் ஆங்கிலம், ஹிந்தியில் டைப்பிங் வேகம் இருக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் www.esic.nic.in என்ற இணையதளத்தில் 15.02.2022 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதன்மைத் தேர்வு மற்றும் கணினித் திறன் தேர்வு ஆகியவற்றில் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவர்களுக்கு பணிகளுக்கேற்ப மாதம் ரூ.18,000 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். பணியிட விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.esic.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications