பட்டதாரிகளை அழைக்கும் நபார்டு வங்கி! ரூ.28,000 முதல் ரூ.55,000 ஊதியத்தில் குவிந்திருக்கும் வேலை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நபார்டு வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளன. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,150ம் அதிகபட்சமாக ரூ.55,600ம் மாத ஊதியமாகவும் பெற முடியும்.

விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் சுருக்கம் தான் நபார்டு (National Bank For Agriculture And Rural Development - NABARD).இந்த வங்கியில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காலியிடம் எவ்வளவு?

காலியிடம் எவ்வளவு?

நபார்டு வங்கியி் மொத்தம் 3 பிரிவுகளில் 170 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி AM Grade ‛A' in (RDBS) பிரிவில் 161 இடங்கள், Assistant Manager In Grade ‛A' (Rajbhasha Service) பிரிவில் 7, AM Grade ‛A' (Protocal And Security Service) பிரிவில் 2 என மொத்தம் 170 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி படிப்பை முடி்திருக்க வேண்டும். உள்ளிட்ட விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்- தேர்வு முறை எப்படி?

மாத ஊதியம்- தேர்வு முறை எப்படி?

விண்ணப்பத்தாரர்கள் முதல்நிலை தேர்வு (200 மதிப்பெண்), மெயின் தேர்வு (200 மதிப்பெண்), நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,150ம் அதிகபட்சமாக ரூ.55,600ம் மாத ஊதியமாக கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

இதில் Grade A (RDBS & Rajbhasha) பணிக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.800ம், எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் Grade A (P & SS) பணியில் பொதுப்பிரிவினருக்கு ரூ.750ம் எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.100ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்படி www.nabard.org இணையதளம் சென்று ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பானையை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பம் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலை தொடர்பான அறிவிப்பை காண Click Here

ஆன்லைன் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+