பட்டதாரிகளை அழைக்கும் நபார்டு வங்கி! ரூ.28,000 முதல் ரூ.55,000 ஊதியத்தில் குவிந்திருக்கும் வேலை!
டெல்லி: நபார்டு வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளன. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,150ம் அதிகபட்சமாக ரூ.55,600ம் மாத ஊதியமாகவும் பெற முடியும்.
விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் சுருக்கம் தான் நபார்டு (National Bank For Agriculture And Rural Development - NABARD).இந்த வங்கியில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காலியிடம் எவ்வளவு?
நபார்டு வங்கியி் மொத்தம் 3 பிரிவுகளில் 170 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி AM Grade ‛A' in (RDBS) பிரிவில் 161 இடங்கள், Assistant Manager In Grade ‛A' (Rajbhasha Service) பிரிவில் 7, AM Grade ‛A' (Protocal And Security Service) பிரிவில் 2 என மொத்தம் 170 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி படிப்பை முடி்திருக்க வேண்டும். உள்ளிட்ட விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்- தேர்வு முறை எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் முதல்நிலை தேர்வு (200 மதிப்பெண்), மெயின் தேர்வு (200 மதிப்பெண்), நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,150ம் அதிகபட்சமாக ரூ.55,600ம் மாத ஊதியமாக கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?
இதில் Grade A (RDBS & Rajbhasha) பணிக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.800ம், எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் Grade A (P & SS) பணியில் பொதுப்பிரிவினருக்கு ரூ.750ம் எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.100ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்படி www.nabard.org இணையதளம் சென்று ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பானையை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பம் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலை தொடர்பான அறிவிப்பை காண Click Here
ஆன்லைன் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications