Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்வே கிடையாது.. ரயில்வேயில் ரூ.1.20 லட்சத்தில் வேலை.. தேதி முடியப்போகுது.. விண்ணப்பிக்கலாம் வாங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்டெல் நிறுவனத்தில் எக்ஸ்பெட் பணியிடங்கள் தேர்வு இன்றி நிரப்பப்பட உள்ளது. இதன்மூலம் மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரயில் டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (Railtel Corporation of India Limited) செயல்பட்டு வருகிறது. அதாவது மத்திய ரயில்வே அமைச்சகத்தில் துணை நிறுவனம் தான் இது.

இந்த நிறுவனத்தின் முக்கிய பணி என்பது பிராட்பேண்ட் மற்றும் விபிஎன் சேவைகளை வழங்குவது தான். நாடு முழுவதும் பிராட்பேண்ட், டெலிகாம், நெட்வொர்க்கை உருவாக்கி ரயில்வேயின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்நிலையில் தான் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து வழங்க உள்ளோம். அதன்படி இந்த நிறுவனத்தில் நெட்வொர்க் எக்ஸ்பெர்ட் பிரிவில் 2, சர்வர் எக்ஸ்பெர்ட் பிரிவில் 2, ஸ்டோரேஜ் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 2, டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 2, சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் பிரிவில் 3, இஎம்எஸ்/என்எம்எஸ் எக்ஸ்பெர்ட் பிரிவி்ல 2, Cloud and Virtualization expert பிரிவில் 2 என மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சம்பளம்- வயது வரம்பு என்ன?

சம்பளம்- வயது வரம்பு என்ன?

இந்த பணிகள் அனைத்து தற்காலிகமானது தான். இதனால் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயதானது 15.12.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வித்தகுதி என்ன?

கல்வித்தகுதி என்ன?

தகவல் தொழில்நுட்ப துறையில் பணி நியமனம் செய்யப்படுவதால் அதுசார்ந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பிஇ, பிடெக் அல்லது எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு நிகரான வகையில் தனியாக படிப்பை முடித்து சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.railtelindia.com/எனும் இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பிறகு [email protected] மெயிலில் விண்ணப்பம் செய்ய வேண்டும். நேர்க்காணல் நவம்பர் 21 மற்றும் 22ம் தேதிகளில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. Railtel Corporation of India Limited, Territory Manager Bhopal,Plot no. 17, Raghunath Nagar near Shahpura thana,Bawadiyakalan, Bhopal (M.P). Pin- 462039 என்ற முகவரியில் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+