ஹெல்மெட் ரெடி.. ரோடு ரெடியா ஆபீசர்?.. வாட்ஸ் ஆப்பைக் கலக்கும் மீம்ஸ்
சென்னை: ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை தமிழகம் முழுவதும் படு சூடான விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பிலும், பேஸ்புக்கிலும் மீம்ஸ்கள் சரமாரியாக பாயத் தொடங்கியுள்ளன.
ஜூலை 1ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் விதிமுறையை காவல்துறை கண்டிப்பாக கடைப்பிடிக்கவுள்ளது. இதையடுத்து குடும்பம் குடும்பமாக மக்கள் ஹெல்மெட் வாங்க கடைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இதை வைத்து சில மீம்ஸ்கள் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகின்றன.
ஒரு படத்தில் வரிசையாக ஹெல்மெட் படங்களைப் போட்டு எனக்கு, மனைவிக்கு, மகனுக்கு, மகளுக்கு, அப்பாவுக்கு, அம்மாவுக்கு, தம்பிக்கு தங்கச்சிக்கு என்று போட்டு விட்டு, கீழே குடும்பத்தில் எல்லாத்துக்கும் தனித் தனியா வாங்கிட்டோம். தரமான ரோடு எப்ப போடுவீங்க ஆபீசர் என்றுகேட்டுள்ளனர்.
இன்னொரு படத்தில் ஒரு ஆட்டோ உள்ளது. அதன் பின்புறம் இப்படி எழுதப்பட்டுள்ளதாக இருக்கிறது.
"ஹெல்மெட் மூலம் டூவீலர் ஓட்டுனர் உயிரைக் காப்பாற்றிய நீதிமன்றமே.. குடியினால் கணவரை இழந்து வாடும் பல்லாயிரக்கணக்கான மனைவிகள், குழந்தைகள் நலன் கருதி அரசு டாஸ்மாக் விற்பதை தடை செய்திட முன்வருமா நீதிமன்றம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.