தமிழகத்தில் இன்று
கோவை:
திருப்பூரில் சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி தொடங்கியது.
எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தரத்திலும், சேவையிலும் உலக நாடுகளுடன் போட்டியிட வேண்டியசூழ்நிலையில் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் உள்ளனர் என கண்காட்சியில் கலந்து கொண்ட ஆயத்த ஆடைஏற்றமதி கவுன்சில் சேர்மன் ராஜூ கோயங்கோ கூறினார்.
திருப்பூரில் செவ்வாய்க்கிழமை சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி துவங்கியது. இந்தக் கண்காட்சி துவக்கவிழாவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோயங்கோ பேசியதாவது:
உலகமயமாக்கலின் போது பல வெளிநாட்டு நிறுவனங்களின் ஆயத்த ஆடைகள் இந்தியாவிற்குள் நுழையும்போது ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கடும்போட்டியை சந்திக்க நேரிடும். மேலும் தொழில்நுட்ப மேம்பாடு,ஆன் லைன் டெலிவரி, ஆடைகளின் தர மேம்பாடு ஆகியவற்றிலும் போட்டிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளை சமாளிக்கவும், வெற்றி பெறவும் தரத்தையும், சேவையையும் மேம்படுத்த வேண்டியதுமிகவும் அவசியம். இதற்கு அரசு எப்போதும் ஆதரவளித்து வருகிறது என்று அவர் பேசினார்.
விழாவில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், செயலர் பொன்னுசாமி, மாவட்ட கலெக்டர்சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கோயங்கா, ஆயத்த ஆடை ஆராய்ச்சிக்காகவும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் ஒரு கோடிரூபாய் செலவிடப்படும். அடுத்த 2005 ம் ஆண்டிற்குள் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி இலக்கான ரூ 9 பில்லியன்டாலர் அளவை எட்டி விடுவோம். இதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அரசு விரைவில் தீர்க்கும் எனஎதிர்பார்க்கிறோம். ஜவுளி மேம்பாட்டு நிதியில் வழங்கப்படும் மானியத்தை அரசு உயர்த்த வேண்டும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications