தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் விடுதலையில் தாமதம் ஏற்படுவதால், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, பெங்களூர் உள்படகர்நாடகத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் மடியால் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக மூன்று முறை காட்டுக்குச்சென்று வீரப்பனைச் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ளார் அரசுத்தூதர் கோபால். ராஜ்குமாருடன் அவர் திரும்பாததால் பெங்களூரில் புதன்கிழமை பதட்டம்ஏற்பட்டது.
பெங்களூரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள்அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 20 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படை, ஆர்.ஏ.எஃப் மற்றும் சி.ஆர்.பி.எஃப் போலீஸார், 90 கம்பெனி கூடுதல்ரோந்துப் போலீஸார், 5000 நகரப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் இதுவரை 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள மாநில ஆயுதப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூர் தவிர மைசூர், மண்டியா,சாம்ராஜ்நகர் பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் மடியால்.
புதன்கிழமை அதிகாலை பெங்களூர் நகரிலும், ராஜ்குமாரின் சொந்த ஊரான காஜனூரிலும் அரசுத்தூதர் கோபால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றவதந்தி பரவியது. இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் அதை மறுத்தனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications