தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் விடுதலையில் தாமதம் ஏற்படுவதால், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, பெங்களூர் உள்படகர்நாடகத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் மடியால் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக மூன்று முறை காட்டுக்குச்சென்று வீரப்பனைச் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ளார் அரசுத்தூதர் கோபால். ராஜ்குமாருடன் அவர் திரும்பாததால் பெங்களூரில் புதன்கிழமை பதட்டம்ஏற்பட்டது.
பெங்களூரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள்அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 20 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படை, ஆர்.ஏ.எஃப் மற்றும் சி.ஆர்.பி.எஃப் போலீஸார், 90 கம்பெனி கூடுதல்ரோந்துப் போலீஸார், 5000 நகரப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் இதுவரை 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள மாநில ஆயுதப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூர் தவிர மைசூர், மண்டியா,சாம்ராஜ்நகர் பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் மடியால்.
புதன்கிழமை அதிகாலை பெங்களூர் நகரிலும், ராஜ்குமாரின் சொந்த ஊரான காஜனூரிலும் அரசுத்தூதர் கோபால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றவதந்தி பரவியது. இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் அதை மறுத்தனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications