மேட்டூர் அணை நீர் இருப்பை நிரூபிப்போம்: கர்நாடக அரசு
பெங்களூர்:
மேட்டூர் அணைக்கு நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வந்து கொண்டிருப்பது என்பதை காவிரி நதி நீர்ஆணையக் கூட்டத்தின் போது ஆதாரத்துடன் நிரூபிப்போம் என்ற கர்நாடக அரசு அறவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூரில் நடந்தது.
இந்த கூட்டம் முடிந்த பின் கர்நாடக நீர்பாசன துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சிகுறைந்துள்ளது. மேலும் கர்நாடகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால்வறட்சியின் பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
காவரி நதி நீர் ஆணைய கூட்டம் வரும் 22ம் தேதி டெல்லியில் கூடவுள்ளது. இதில் நான்கு மாநில அதிகாரிகள்கலந்து கொள்வார்கள்.
காவிரி நிலை குறித்து பல முறை கர்நாடகம் எடுத்துரைத்துள்ளது. இருப்பினும் காவிரி நதி நீர் ஆணையகூட்டத்திலும் கர்நாடகம் பங்கேற்கும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில்பங்கேற்கவுள்ளோம்.
மேட்டூர் அணையில் தற்போது 8.364 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. இரண்டு நாட்களாக மேட்டூருக்கு நாள்ஒன்றுக்கு 1 டி.எம்.சி. நீர் வந்து கொண்டிருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது.
இந்த விவரங்களை காவிரி நதி நீர் ஆணையத்தில் எடுத்துக் கூறுவோம் என்றார் பாட்டீல்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications