காஷ்மீர் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போரிவோம்- அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் அமெரிக்க போராடும் என அந் நாட்டுவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறினார்.
இவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறி பாகிஸ்தான் ஆயுதங்கள், பணம் கொடுத்து ஆதரித்து வருகிறது.இவர்களுக்கு ஆப்கானிஸ்தானும் ஆதரவளிக்கிறது.
இது தொடர்பாக இந்தியா பல முறை பல சர்வதேசக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லியும் அதை அமெரிக்காகண்டுகொண்டதில்லை. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் அதிருப்தியாளர்கள் (ரெபல்ஸ்) வன்முறையில்ஈடுபடுவதாகத் தான் கூறி வந்தது.
இந் நிலையில் அமெரிக்காவையே தாக்கி அவர்களை கதிகலங்கச் செய்துள்ளனர் தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளின்தலைவனான பின்லேடன் தான் பல காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் குரு.
பின்லேடனைத் தாக்க அமெரிக்காவுக்கு உதவத் தயாராக உள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் அதற்குப் பதிலாக காஷ்மீரில் நடந்துவரும் தீவிரவாதத்தைக் கண்டுகொள்ளக் கூடாது என அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் தான் நியூயார்க்கில் நடந்த தாக்குதலுக்குப் பின் உலகம் முழுவதும் பல தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்வதாகஅறிவித்த அமெரிக்கா காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளை தடை செய்யாமல் விட்டுவிட்டது.
இதை இந்தியா மறைமுகமாக கண்டித்து வருகிறது. அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய இந்திய பாதுகாப்புஆலோசகர் இந்த விஷய்ததில் இந்தியாவின் வருத்தத்தைத் தெரிவித்தார்.
இந் நிலையில் தான் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் படுகொலையாயினர்.
இதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகரை சந்தித்துப் பேசினார்.அப்போது தான் அமெரிக்க அதிபரும் திடீரென வந்து ஜஸ்வந்த் சிங்கை சந்தித்தார்.
தொடர்ந்து ஜஸ்வந்த் சிங் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாவல், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றார்.
இது அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாகும்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications