காஷ்மீர் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போரிவோம்- அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் அமெரிக்க போராடும் என அந் நாட்டுவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறினார்.
இவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறி பாகிஸ்தான் ஆயுதங்கள், பணம் கொடுத்து ஆதரித்து வருகிறது.இவர்களுக்கு ஆப்கானிஸ்தானும் ஆதரவளிக்கிறது.
இது தொடர்பாக இந்தியா பல முறை பல சர்வதேசக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லியும் அதை அமெரிக்காகண்டுகொண்டதில்லை. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் அதிருப்தியாளர்கள் (ரெபல்ஸ்) வன்முறையில்ஈடுபடுவதாகத் தான் கூறி வந்தது.
இந் நிலையில் அமெரிக்காவையே தாக்கி அவர்களை கதிகலங்கச் செய்துள்ளனர் தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளின்தலைவனான பின்லேடன் தான் பல காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் குரு.
பின்லேடனைத் தாக்க அமெரிக்காவுக்கு உதவத் தயாராக உள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் அதற்குப் பதிலாக காஷ்மீரில் நடந்துவரும் தீவிரவாதத்தைக் கண்டுகொள்ளக் கூடாது என அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் தான் நியூயார்க்கில் நடந்த தாக்குதலுக்குப் பின் உலகம் முழுவதும் பல தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்வதாகஅறிவித்த அமெரிக்கா காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளை தடை செய்யாமல் விட்டுவிட்டது.
இதை இந்தியா மறைமுகமாக கண்டித்து வருகிறது. அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய இந்திய பாதுகாப்புஆலோசகர் இந்த விஷய்ததில் இந்தியாவின் வருத்தத்தைத் தெரிவித்தார்.
இந் நிலையில் தான் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் படுகொலையாயினர்.
இதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகரை சந்தித்துப் பேசினார்.அப்போது தான் அமெரிக்க அதிபரும் திடீரென வந்து ஜஸ்வந்த் சிங்கை சந்தித்தார்.
தொடர்ந்து ஜஸ்வந்த் சிங் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாவல், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றார்.
இது அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாகும்.
-
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி












Click it and Unblock the Notifications