காஷ்மீர் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போரிவோம்- அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் அமெரிக்க போராடும் என அந் நாட்டுவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறினார்.
இவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறி பாகிஸ்தான் ஆயுதங்கள், பணம் கொடுத்து ஆதரித்து வருகிறது.இவர்களுக்கு ஆப்கானிஸ்தானும் ஆதரவளிக்கிறது.
இது தொடர்பாக இந்தியா பல முறை பல சர்வதேசக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லியும் அதை அமெரிக்காகண்டுகொண்டதில்லை. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் அதிருப்தியாளர்கள் (ரெபல்ஸ்) வன்முறையில்ஈடுபடுவதாகத் தான் கூறி வந்தது.
இந் நிலையில் அமெரிக்காவையே தாக்கி அவர்களை கதிகலங்கச் செய்துள்ளனர் தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளின்தலைவனான பின்லேடன் தான் பல காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் குரு.
பின்லேடனைத் தாக்க அமெரிக்காவுக்கு உதவத் தயாராக உள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் அதற்குப் பதிலாக காஷ்மீரில் நடந்துவரும் தீவிரவாதத்தைக் கண்டுகொள்ளக் கூடாது என அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் தான் நியூயார்க்கில் நடந்த தாக்குதலுக்குப் பின் உலகம் முழுவதும் பல தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்வதாகஅறிவித்த அமெரிக்கா காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளை தடை செய்யாமல் விட்டுவிட்டது.
இதை இந்தியா மறைமுகமாக கண்டித்து வருகிறது. அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய இந்திய பாதுகாப்புஆலோசகர் இந்த விஷய்ததில் இந்தியாவின் வருத்தத்தைத் தெரிவித்தார்.
இந் நிலையில் தான் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் படுகொலையாயினர்.
இதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகரை சந்தித்துப் பேசினார்.அப்போது தான் அமெரிக்க அதிபரும் திடீரென வந்து ஜஸ்வந்த் சிங்கை சந்தித்தார்.
தொடர்ந்து ஜஸ்வந்த் சிங் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாவல், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றார்.
இது அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாகும்.
-
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய ஆயில் நிறுவனங்கள்..3க்கு மட்டுமே முன்னுரிமை! ஹோட்டல்காரங்களுக்கு ஆப்பு! -
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
உலகெங்கும் ஸ்லீப்பர் செல்களுக்கு போன மெசேஜ்.. ரகசியமாக ஈரானில் இருந்து பறந்த சிக்னல்.. பதற்றம்! -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
37வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிக்கலில் இஸ்ரேல்! -
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது! -
நீ வேணா வந்து பாரு..1 லிட்டர கூட எடுத்துட்டு போக முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட ஈரான்! போச்சு -
ஈரான் போருக்கும்.. LPG சிலிண்டருக்கும் என்ன தொடர்பு? எப்படி தட்டுப்பாடு வந்தது? சிக்கலின் ஆதி புள்ளி












Click it and Unblock the Notifications