சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புகடுமையாக்கப்பட்டுள்ளது.
மும்பை-டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதாக புரளி பரவியதையடுத்து நேற்று இரவே பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் விமானங்களைக் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ராணுவ உளவுப் பிரிவுஏற்கனவே எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகளின் தொலைபேசி பேச்சுக்கள், ரகசிய வயர்லெஸ் பேச்சுக்களை இடைமறித்துக் கேட்ட ராணுவ தகவல் தொடர்புபிரிவினர் இந்தியாவில் விமானங்கள் கடத்துவது குறித்த தீவிரவாதிகளின் திட்டங்களை தெரிந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்துத் தான் மும்பை-டெல்லி விமானக் கடத்தல் புரளியை அரசே திட்டமிட்டு கிளப்பிவிட்டிருக்கலாம் எனவும்கருதப்படுகிறது. கடத்தல்களை சமாளிக்க இந்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதிய அளவு உள்ளனவா என்பைத்சோதனையிட உயர் மட்டத்தில் இப்படி ஒரு நாடகம் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மத்திய அரசின் உத்தரவையடுத்து இந்தியா முழவதுமே விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 3 அடுக்கு சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயில், விமானநிலையத்திற்குள் ஒரு சோதனை மற்றும் விமானத்திற்கு ஏறும் முன் ஒரு சோதனை என பயணிகள் மூன்று கட்டமாகபரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர்.
முறையான பயணச் சீட்டு இல்லாமல் வருவோர் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல,பார்வையாளர்களுக்கும் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியிலும் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார்விமானங்களைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரன்வேயிலும் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படுகின்றன.
கல்கத்தா விமான நிலையத்தில் பயணிகள் தவிர வேறு அனைவரும் உள்ளே நுழையவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடும் பாதுகாப்பில் இருக்கும் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications