சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புகடுமையாக்கப்பட்டுள்ளது.
மும்பை-டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதாக புரளி பரவியதையடுத்து நேற்று இரவே பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் விமானங்களைக் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ராணுவ உளவுப் பிரிவுஏற்கனவே எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகளின் தொலைபேசி பேச்சுக்கள், ரகசிய வயர்லெஸ் பேச்சுக்களை இடைமறித்துக் கேட்ட ராணுவ தகவல் தொடர்புபிரிவினர் இந்தியாவில் விமானங்கள் கடத்துவது குறித்த தீவிரவாதிகளின் திட்டங்களை தெரிந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்துத் தான் மும்பை-டெல்லி விமானக் கடத்தல் புரளியை அரசே திட்டமிட்டு கிளப்பிவிட்டிருக்கலாம் எனவும்கருதப்படுகிறது. கடத்தல்களை சமாளிக்க இந்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதிய அளவு உள்ளனவா என்பைத்சோதனையிட உயர் மட்டத்தில் இப்படி ஒரு நாடகம் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மத்திய அரசின் உத்தரவையடுத்து இந்தியா முழவதுமே விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 3 அடுக்கு சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயில், விமானநிலையத்திற்குள் ஒரு சோதனை மற்றும் விமானத்திற்கு ஏறும் முன் ஒரு சோதனை என பயணிகள் மூன்று கட்டமாகபரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர்.
முறையான பயணச் சீட்டு இல்லாமல் வருவோர் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல,பார்வையாளர்களுக்கும் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியிலும் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார்விமானங்களைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரன்வேயிலும் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படுகின்றன.
கல்கத்தா விமான நிலையத்தில் பயணிகள் தவிர வேறு அனைவரும் உள்ளே நுழையவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடும் பாதுகாப்பில் இருக்கும் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications