விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்:
பின் லேடனின் தீவிரவாத இயக்கமான அல்-காய்தா இயக்கத்துடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும்வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலை அடுத்து, உலகம்முழுவதும் உள்ள 26 தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்தது. மேலும் எந்த நாடும் இந்தத்தீவிரவாத இயக்கங்களை ஆதரிக்கக் கூடாது என்றும், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்என்றும் அமெரிக்கா அறிவித்தது.
ஆனால், இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா அப்போது சேர்க்கவில்லை.
அதே போல கடந்த 1999ம் ஆண்டிலேயே 26 அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது. அப்போதும் புலிகள் இயக்கத்தை இதில் அமெரிக்கா சேர்க்கவில்லை.
ஆனால் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்ட பட்டியலில் விடுதலைப்புலி இயக்கத்தையும், அப்பாவி மக்களைக்கொன்று குவித்து வரும் தீவிரவாத இயக்கங்களில் ஒன்றாக அமெரிக்கா சேர்த்துள்ளது. மேலும் பல பாலஸ்தீனஇஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வெறியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் போச்சர் கூறுகையில்,
வெளிநாடுகளில் இருந்துகொண்டு அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் 26 தீவிரவாத இயக்கங்கள்1999ம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டன. இப்போது இதில் பின் லேடனின் அல்-காய்தா, பாலஸ்தீனத்தின்ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத், எகிப்தின் அல் ஜிகாத் மற்றும் காமா அல்-இஸ்லாமியா, இலங்கையின்தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம், கொலம்பியாவின் எப்.ஏ.ஆர்.சி, ஸ்பெயினின் பேஸ்க் ஈ.டி.ஏ. போன்றவைசேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இயக்கங்களுக்கு அமெரிக்க மக்கள் நிதியுதவியோ, பொருளுதவியோ அளிக்கக கூடாது. மேலும்வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இந்தத் தீவிரவாத இயக்கங்களின் கணக்குகளை முடக்கிவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் பின் லேடன் தலைமையில் இயங்கி வரும் அல்-காய்தா இயக்கம்தான்அமெரிக்காவின் முக்கிய இலக்கு என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படைமனிதவெடிகுண்டு வைத்துக் கொன்றது. இதையடுத்த அந்த இயக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகஇந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications