வீரப்பனிடம் ஆதிவாசிகளை தூது அனுப்ப கர்நாடகம் புதிய திட்டம்
சென்னை:
கர்நாடகத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களின் நலன் கருதி நாகப்பாவை விட்டு விடுமாறு வீரப்பனுக்குகொளத்தூர் மணி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீரப்பனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு கொளத்தூர் மணி கர்நாடகஅதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாகப்பாவை விட்டு விடுமாறு ஏற்கனவே ஒரு முறை சிறையில் இருந்தவாரே கேசட்டில் வீரப்பனுக்கு கோரிக்கைவிடுத்தார் மணி. அது வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக வீரப்பனுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார் கொளத்தூர் மணி.
புதிய வேண்டுகோளில் அவர் கூறியிருப்பதாவது: வீரப்பன் அவர்களே, நானோ அல்லது பழ. நெடுமாறனோகாட்டுக்குள் தூதர்களாக வர முடியாது. என் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை நானே சந்தித்துக்கொள்கிறேன்.
நாங்கள் வருவோம் என்று நம்ப வேண்டாம். அதற்காக வருத்தப்படவும் வேண்டாம்.
நாகப்பாவின் உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டுஉடனடியாக விடுதலை செய்யவும். எனது கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
காட்டில் அதிரடிப்படை இல்லை, வாபஸ் வாங்கி விட்டது. எனவே உங்களது உயிருக்கு எந்தவித ஆபத்தும்ஏற்படாது. கர்நாடகத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால்நாகப்பாவை உடனடியாக விடுவித்தேயாக வேண்டும் என்று கூறியுள்ளார் மணி.
கொளத்தூர் மணியின் இந்த கோரிக்கையை மைசூர் மற்றும் கோவை வானொலி நிலையங்கள் திரும்பத் திரும்பஒலிபரப்பி வருகின்றன.
தூதர் யார்?:
இதற்கிடையே வீரப்பனிடம் தூதராக யாரை அனுப்புவது என்பதில் பெரும் குழப்பத்தில் கர்நாடகம் உள்ளது.கொளத்தூர் மணியில் தம்பி பழனிச்சாமியை அனுப்புவதா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பைச்சேர்ந்த பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன் (இவர்கள் பழ.நெடுமாறனுடன் சேர்ந்து ராஜ்குமாரை மீட்கஉதவியவர்கள்) ஆகியோரை அனுப்புவதா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
ஆதிவாசிகளை அனுப்பத் திட்டம்:
இதற்கிடையே வீரப்பனுக்கு நெருக்கமான ஆதிவாசிகள் இருவரையே தூதுவராக அனுப்பவும் கர்நாடகம் யோசித்து வருவதாகக்கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதிவாசிகளுடன் கர்நாடக அதிரடிப்படையினர் பேச்சு நடத்தி வருகின்றனர். தூதர் குறித்து இன்றுஇரவுக்குள் முடிவு செய்யப்படுவிடும் என்று தெரிகிறது.
தமிழக தேடுதல் வேட்டை:
கர்நாடக அதிரடிப்படை தனது தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டபோதிலும் தமிழக அதிரடிப்படை தனது வேட்டையை நிறுத்தவில்லை.வீரப்பனைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
காட்டுக்குள் நாகப்பா குடும்பம்:
இந் நிலையில் வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க நாங்களே அவருடன் பேச்சு நடத்தப் போகிறோம் என்று நாகப்பா குடும்பத்தினர்கூறியுள்ளனர். அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் அவ்வப்போது காட்டுப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களைகர்நாடக அதிரடிப்படை தடுத்து திருப்பி அனுப்பி வருகிறது.
-->
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications