For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக ஆளுநருடன் ஜெ. திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக ஆளுநர் ராமமோகன் ராவை முதல்வர் ஜெயலலிதா திடீரென்று சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை ராஜ் பவன் சென்ற ஜெயலலிதா, ஆளுநரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார்.
மரியாதை நிமித்தமாகத் தான் இந்த சந்திப்பு நடந்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சமீபத்தில் நடந்த அரசு ஊழியர் ஸ்டிரைக், சர்ச்சைக்குரிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் எடுத்துரைத்தார் என்று கூறப்படுகிறது.
ஆளுநருக்கும், அவரது மனைவிக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களையும் அப்போது ஜெயலலிதாதெரிவித்துக் கொண்டார்.
Story first published: Sunday, November 3, 2002, 5:30 [IST]