அமைதி கண்காணிப்பு குழுவுக்கு புலிகள் கோபக் கடிதம்
கொழும்பு:
யாழ்பாணத்தில் ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு இருப்பதை ஆதரித்துப் பேசியுள்ள அமைதிக் கண்காணிப்புக் குழுவினருக்குகடும் கண்டனம் தெரிவித்துள்ளது விடுதலைப் புலிகள் இயக்கம்.
இது தொடர்பாக அமைதிக் கண்காணிப்புக் குழுவின் (Sri Lanka Monitoring Mission)தலைவருக்கு கோபக் கனல் தெறிக்கும்கடிதத்தை எழுதியுள்ளார் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம்.
அமைதிக் குழுவின் தலைவரும் முன்னாள் நார்வே ராணுவத் தளபதியுமான டுரோன்ட் புருஹோவ்டாவுக்கு பாலசிங்கம்எழுதியுள்ள கடித விவரம்:
யாழ்பாணத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை தீவிர பாதுகாப்புப் பகுதிகள் என்றும் அங்கிருந்து ராணுவத்தினரைவெளியேற்றினால் அது பிரச்சனையை உருவாக்கும் என்றும் நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். மேலும் அந்தப் பகுதிகளில்ராணுவத்தின் தாக்குதல் திறனை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுப்பது தவறு என்று பேசியுள்ளீர்கள்.
இதன்மூலம் தமிழர்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ராணுவத்திற்கு நீங்கள் முழு ஆதரவாகப் பேசுவதுதெரிகிறது.
ராணுவத்தினரை யாழ்பாணத்தில் இருந்து திரும்பப் பெற்றால் புலிகள், ராணுவ படைகளின் சம நிலை குலையும் என்று கூறியுள்ளநீங்கள், இந்த ஆக்கிரமிப்பால் யாழ்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் குறித்துகவலைப்படாதது ஏன்?
அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தும் வகையில் இந்த ஆக்கிரமிப்புகளை ராணுவம் கைவிட வேண்டும் என்றகோரிக்கையை வைத்தோம். ஆனால், அதை ராணுவம் நிராகரித்தது. ஆனால், இந்த ஆக்கிரமிப்புகளை ஆதரித்து நீங்களும்ராணுவத்தின் தொனியில் பேசியிருக்கிறீர்கள்.
இது ஏற்கத்தக்கதல்ல. ராணுவத்தின் குரலில் பேசும் இந்தக் கண்காணிப்புக் குழுவே தேவை தானா என்று கூட எங்களுக்குச்சந்தேகம் வருகிறது.
நாங்கள் ராணுவத்தை முழுவதுமாக உடனே வெளியேறச் சொல்லவில்லை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வீடுகளைவிட்டுத் தான் வெளியேறச் சொல்கிறோம்.
இவ்வாறு தனது கடிதத்தில் ஆண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
பின்னணியில் சந்திரிகா:
யாழ்பாணத்தில் தமிழர்களின் வீடுகளை ஆக்கிரமித்து பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ள ராணுவத்தை எக் காரணம்கொண்டும் வெளியேற வேண்டாம் என்று அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
எக் காரணம் கொண்டு ஆக்கிரமித்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகஅவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் வரும் ஜனவரி 6ம் தேதி தாய்லாந்தில் நடக்கவுள்ள அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் இந்தப்பிரச்சனையைக் கிளப்புவர் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications