ராகுல் காந்தி வருகை: திமுக ரூ. 25 லட்சம் உதவி
டெல்லி:
பள்ளித் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகனும் எம்பியுமான ராகுல் காந்தி இன்று கும்பகோணம் சென்றார்.
காலை சென்னை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் சென்றார். அவருடன்பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரும் சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்த அவர், இறந்த குழந்தைகளின்பெற்றோர் சலரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ராகுல் கண் கலங்கினார். விபத்து நடந்தபள்ளியையும் அவர் பார்வையிட்டார்.
நாளை சோனியா காந்தியும் கும்பகோணம் வருவார் என்று தெரிகிறது.
பெட்ரோலியத்துறை மருத்துவ குழுக்கள்:
இதற்கிடையே தீக் காய மருத்துவ உதவி சாதனங்கள், மருந்துகளுடன் கும்பகோணம் விரையுமாறு பெட்ரோலியத்துறையின்மருத்துவப் பிரிவுக்கு அந்தத் துறையின் அமைச்சர் மணிசங்கர அய்யர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அய்யரின் மயிலாடுதுறை தொகுதியின் கீழ் தான் கும்பகோணம் நகர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளில் பாதுகாப்பு: தயாநிதி
இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்து சென்னை திரும்பிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிருபர்களிடம்பேசுகையில்,
இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நாட்டின் எந்தப் பகுதியிலும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்றுபிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
தீ பரவிய சுமார் ஒரு மணி நேரத்திற்குள் 65 குழந்தைகள் மாண்டு விட்டனர். 60 முதல் 70 சதவீத உடல் தீயில் கருகிய நிலையில் 4குழந்தைகள் மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
நேற்றிரவு மயானத்தில் போதிய விளக்குகள் இன்றியும், குழிகள் வெட்ட ஆட்கள் இன்றியும் பெற்றோர்கள்அவதிப்பட்டதாக அறிந்தேன். இந்தச் சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை பிரதமரிடம் சமர்பிப்பேன் என்றார்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதியும், காற்றாடிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. தீக்காயத்தால் குழந்தைகள் வலி, எரிச்சலால் அலறியதையடுத்து மருத்துவமனைக்கு பேன்களையும் வரவழைத்துத் தந்தார் தயாநிதி.
திமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிதி:
இதற்கிடையே, தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சம்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏவுமான கோ.சி.மணி தலைமையில் 6 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூலம் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி தரப்படும்.
2001ம் ஆண்டிலிருந்து இதுவரை பல தீவிபத்துக்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. கடைசியாக ஸ்ரீரங்கத்தில் கொடூர தீ விபத்து நடந்து 60பேர் பலியானார்கள். அதற்குப் பிறகும் கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல்விட்டதால்தான் இந்த கொடூர விபத்து நடந்து விட்டது என்றார்.
டாக்டர்களுக்கு அன்புமணி உத்தரவு:
இதற்கிடையே தீக்காயமடைந்த கும்பகோணம் குழந்தைகளுக்கு நவீன சிகிச்சைகள் அளிக்க தமிழகம்விரையத் தயாராக இருக்குமாறு டெல்லியின் மிகப் பெரிய மருத்துவமனையான சப்தர்சங்மருத்துவமனையின் தீக் காயம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைப் பிரிவுக்கு மத்திய நலத்துறைஅமைச்சர் அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்என்று அவர் கூறியுள்ளார்.
அதே போல பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்தும் ஒரு குழுவை கும்பகோணத்துக்குஅன்புமணி அனுப்பி வைத்துள்ளார்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications