ஜெயலட்சுமி: வசமாய் சிக்கினார் இளங்கோவன்
மதுரை:
| ஜெயலட்சுமியின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளார் இன்ஸ்பெக்டர்இளங்கோவன்.
ஜெயலட்சுமியை தனது மனைவி என்று குறிப்பிட்டு, தனது போலீஸ் குடியிருப்பின் முகவரியைக் கொடுத்து, இந்தவங்கிக் கணக்கை தொடங்கிக் கொடுத்ததே இளங்கோவன் தான் என்பது சிபிஐ விசாரணையில் உறுதியாகியுள்ளது. ஜெயலட்சுமியை சும்மா பாத்துருக்கேன்.. வேற ஒண்ணுமே தெரியாது என்று புருடா விட்டவர் தான் இந்தஇளங்கோவன். |
இந் நிலையில் சிபிஐ கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையிலான குழு, ஜெயலட்சுமி கணக்கு வைத்துள்ள கனராவங்கியில் ஆய்வு செய்தபோது ஜெயலட்சுமியை தனது மனைவி என்று இளங்கோவன் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது.
ஜெயலட்சுமி பேட்டி:
வங்கிகளில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து நிருபரிடம் ஜெயலட்சுமி கூறுகையில்,
கடந்த டிசம்பர் மாதம் 13 அல்லது 14ம் தேதி கனரா வங்கியில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் எனக்கு கணக்குதொடங்கி கொடுத்தார். அதற்கான விண்ணப்ப படிவத்தை ஏட்டு கண்ணன் பூர்த்தி செய்தார். அதில் நான்கையெழுத்து போட்டேன்.
பின்னர் என்னிடம் 60 பிளாங்க் செக் சிலிப்புகளில் கையெழுத்தையும் வாங்கிக் கொண்ட, இளங்கோவன் அதைதன் வசமே வைத்துக் கொண்டார். தனது லஞ்சப் பணத்தை பதுக்க பினாமியாக என் பெயரில் அந்த வங்கிக்கணக்கை துவக்கினார். அதில் பண வரவு-செலவுகளை நடத்தியதும் இளங்கோவன் தான்.
அதேபோல் எனக்கு லோனில் கார் வாங்க, திருநகர் ஸ்டேட் வங்கியில் ஒரு கணக்கை இன்ஸ்பெக்டர் மலைச்சாமிதொடங்கி கொடுத்தார். போலீஸ் ரைட்டர் சாமியப்பன் விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொடுத்தார். செக்சிலிப்புகளில் கையெழுத்து போட்டு வாங்கி அவர்களே பைனான்ஸ் கம்பெனிக்கு கொடுத்துவிட்டனர் என்றார்ஜெயலட்சுமி.
போலீஸ் அதிகாரிகள் கைது?
இதற்கிடையே இளஙகோவன், மலைச்சாமி உள்ளிட்ட 21 போலீசார், அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பி.ஏ.ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, கடத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், அதிகாரதுஷ்பிரயோகம் செய்தல், பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல்செய்துள்ளது.
எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 பேரும் சிபிஐயால் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு













Click it and Unblock the Notifications