வீரப்பனை காட்டிக் கொடுத்த உளவாளிகள்!
ஈரோடு:
வீரப்பனின் நடமாடும் பகுதி குறித்து தங்களுக்கு கடந்த 10 நாட்களாகவே உளவாளிகள் மூலமாக சரியான தகவல்கிடைத்து வந்ததாகவும், இதையடுத்து மிக ரகசியமான திட்டம் தீட்டி வீரப்பனை வலையில் விழச் செய்ததாகவும்அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தார்.
வீரப்பனை சுட்டுக் கொன்ற டீமுக்கு விஜய்குமாருடன் சேர்ந்து தலைமை தாங்கிய செந்தாமரைக் கண்ணன்நிருபர்களிடம் பேசுகையில்,
உளவு பார்ப்பவர்கள், அதிரடிப்படையின் ரகசிய நடவடிக்கைகள் எல்லாம் சேர்ந்து துல்லியமாக நடத்தப்பட்டதாக்குதல் இது. வீரப்பன் இந்தப் பகுதியில் வாகனத்தில் செல்ல இருப்பதாக பல நாட்களுக்கு முன்பே தகவல்வந்துவிட்டது.
சில உள்ளூர் மக்களின் உதவியுடன் வீரப்பன் வெளியில் ஒரு மருத்துவமனைக்குச் செல்ல இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வீரப்பன் கும்பலுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடாதபடி எங்களது திட்டங்கள் தீட்டப்பட்டன. அவனைகாட்டுக்கு வெளியே தைரியமாக வரச் செய்யும் வகையில் நாங்கள் பதுங்கிக் கொண்டோம். எங்கள்நடமாட்டத்தை சுருக்கிக் கொண்டோம்.
அதே நேரத்தில் ரகசிய கண்காணிப்பை தீவிரமாக்கினோம். எங்களுக்கு கிடைத்த உளவுத் தகவல் சரியாகிவிட்டது.நாங்கள் எதிர்பார்த்தது போலவே தைரியமாகவே காட்டை விட்டு வெளியே வந்தான்.
இந்தத் தகவல் நேற்றிரவு 10.30 மணியளவில் எங்களுக்கு வந்து சேர்ந்தது. ஒரு வாகனத்தில் கிளம்பியதாகத் தான்தகவல் வந்தது. இதையடுத்து மூன்று டீம்களாக பிரிந்து பரவினோம். வழியில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடஇருந்தோம்.
காட்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது எங்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தவே அதைத் தடுத்தோம்,சுற்றி வளைத்தோம்.
அப்போது வேனில் இருந்த டிரைவர் வெளியே குதித்து இருட்டில் ஓடி தப்பிவிட்டான். அப்போது கூட இதில்வீரப்பன் இருப்பான் என்று நினைக்கவில்லை.
வீரப்பன் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை. அவன்நல்ல திடகாத்திரமாகவே இருந்தான். காட்டுப் பகுதியில் ஆம்புலன்சில் சென்றால் சந்தேகம் வராது என்று நினைத்துஅந்த வாகனத்தை பயன்படுத்தியிருக்கலாம.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications