தமிழகத்தில் இந்து மாநாடுகள் நடத்த பாஜக திட்டம்
ராமநாதபுரம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக அதிசயமானால் அதன் புனிதம் கெட்டுப் போய் விடும் என்று பாரதீய ஜனதா கட்சியின் அகிலஇந்திய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு, சிறுபான்மை மக்களின் நலன்களிலேயே அதிக அக்கறை செலுத்துகிறது. நாட்டிற்குதீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் பொடா சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகள் பலர் விடுதலை ஆகும்வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இதை நாங்கள்எதிர்ப்போம். ஜெயேந்திரர் குற்றமற்றவர். அவர் மீது வேண்டும் என்றே தரக்குறைவான ஆபாச விமர்சனங்கள் கூறப்படுகின்றன. இத்தகையவிமர்சனங்களை நிறுத்த வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க இணைய தளத்தில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாக்கெடுப்புநடத்துகிறது. பக்திக்குரிய இடமான மீனாட்சி அம்மன் கோயில் அதிசய பொருளாக மாறினால் அதன் புனிதம் கெடும். வழிபாட்டுக்குஇடையூறு ஏற்படும்.
எனவே மத்திய அரசின் கலாச்சார துறை வாக்கெடுப்பை கண்காணிக்க வேண்டும் அல்லது வாக்கெடுப்பை அரசு மேற்பார்வையில் நடத்தவேண்டும். மத உணர்வுகளைத் தூண்டியதாக பாஜக எம்.எல்.ஏ. எச்.ராஜா மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.
சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது ராஜா குறுக்கிட்டு பேசியதாலேயே அவர் மீது இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்.
தமிழ்நாடு முழுவதும் இந்து மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறோம். முதலில் ராமநாதபுரம், மதுரை, திருச்சியில் இந்த மாநாடு நடக்கும்.வருகிற 18ம் தேதி விழுப்புரத்தி லும், 19ம் தேதி கோவையிலும் நடக்கும். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கலந்துகொள்வார் என்று கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications