சுனாமியை கண்டறியும் கருவிகள்: திமுக கூட்டணி கோரிக்கை
சென்னை:
![]() |
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 26ம் தேதியை சுனாமி தினமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று சென்னைஅண்ணா அறிவாலயத்தில் நடந்தது. சுனாமி சேதம் குறித்து முதல்வர் ஜெயலலிதா நாளை கூட்டியுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடர்பாக குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குத் திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இதில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமகநிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நாளை ஜெயலலிதா கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட வேண்டியகோரிக்கைகள் குறித்துத் தலைவர்கள் விவாதித்தனர்.
பின்னர் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
சுனாமி அலைகள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் சாதனங்கள் ஏதும் இல்லாததால் தமிழகத்தில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டது.எனவே அத்தகைய சாதனங்களை உடனடியாக சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அமைக்க வேண்டும்.பின்னர் தமிழக கடலோரம் முழுவதும் இந்தச் சாதனங்களைப் பொறுத்த வேண்டும்.
எங்கெல்லாம் மணல் கொள்ளை நடந்ததோ அங்கு தான் கடல் கொந்தளிப்பின் பாதிப்பின் அதிகமாக இருந்துள்ளது. இதனால்கடலோரங்களில் மணல் எடுப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும்.
கடல் கொந்தளிப்பால் பல மாவட்டங்களில் விவசாய நிலங்களிலும் கடல் நீர் புகுந்துவிட்டது.ய இதனால் நிலங்கள்உவர் தன்மை உடையவையாக மாறும் அபாயம் உள்ளது. இதைச் சீர் செய்து மீண்டும் விவசாயத்தை மேற்கொளளவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 உதவித் தொகை வழங்க வேண்டும்.
இயற்கை சீற்றங்களின்போது போக்குவரத்தைத் துரிதப்படுத்த, கிழக்குக் கரையோர சாலையை 4 வழிப்பாதையாக மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிதியுதவி அளிக்கவேண்டும். சேதமடைந்த கட்டுமரங்கள், படகுகள், வலைகள் போன்றவற்றை புதிதாக தமிழக அரசு முழுவதுமாகஇலவசமாக அளிக்க வேண்டும்.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 26ம் தேதியை சுனாமி தினமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்கவேண்டும்.
நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க, அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் ஆகியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாளை முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எந்தத் தகவலையும் இக் கூட்டணி வெளியிடவில்லை.இரவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications