ஜார்க்கண்ட்: ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக
ராஞ்சி:
ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சியமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணித் தலைவர்கள்இன்று 41 எம்.எல்.ஏக்களுடன் சென்று ஆளுநர் சையத் ராஸியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
இங்கு ஆட்சியமைக்க 41 எம்.எல்.ஏக்களே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணியின் சார்பில் முதல்வர் பதவிக்கு மத்திய அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்திமோச்சா தலைவருமான சிபு சோரனை முன்னிருத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வென்றிருந்தாலும் தனித்து ஆட்சியமைக்கபோதிய பலம் இல்லை. இதனால் அங்கு காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோச்சா- லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா கட்சி கூட்டணிஆட்சியமைக்க முயன்று வருகிறது.
81 இடங்கள் கொண்ட சட்டமன்றதில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. இங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம்கூட்டணிக்கு இம்முறை 36 இடங்களே கிடைத்துள்ளது. இதில் 30 பேர் பா.ஜ.கவினர், 6 பேர் ஐக்கிய ஜனதா தளத்தினர்.
இந்தக் கூட்டணிக்கு 5 சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களையும் அழைத்துக் கொண்டு மொத்தம் 41எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை சந்தித்தனர் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் தலைவர்கள்.
தங்களிடம் போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதால் மீண்டும் ஆட்சியைமக்க தங்கள் கூட்டணியை அழைக்க வேண்டும் என அவர்கள்கோரினர்.
காங்கிரஸ்- மத்திய அமைச்சர் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணி 26 இடங்களில் வென்றுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம்7 இடங்களில் வென்றுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகள், 2 சுயேச்சைகள் இக் கூட்டணியுடன் உள்ளனர். இதனால் இக்கூட்டணிக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. மேலும் சில சுயேச்சைகள் உதவியுடன் ஆட்சியைப் பிடிக்க இக் கூட்டணி திட்டமிட்டது.
அதற்குள் 5 சுயேச்சைகளையும் வளைத்துவிட்டது பாஜக-ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி. இதனால் இந்த சுயேச்சைகளை மீண்டும் தங்கள்பக்கம் இழுக்கும் வேலையில் காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி இறங்கவுள்ளது.
இம் மாநிலத்தில் சிபுசோரனை முதல்வராக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவரை சட்டமன்றத்தின் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்திமோச்சா கூட்டணியின் தலைவராகத் தேர்வு செய்ய இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி இன்று தெரிவித்தார்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications