நாட்டின் உடனடி தேவை நதிகள் இணைப்பு: கலாம் சுதந்திர தின உரை
டெல்லி:
நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது சுதந்திரதின உரையில் கூறினார்.
நாட்டின் 59வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று தொலைக்காட்சி மற்றும் வானொலிமூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மகராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், ஒரிசா உட்பட பலமாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பெருமளவு உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன.இத்தகைய சேதங்கள் ஆண்டு தோறும் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பெருநகரங்களில் வெள்ள நீர் வடிகால்கட்டடமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.
இது ஒருபுறமென்றால் மறுபுறம் நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சியும் நிலவுகிறது. இவ்வாறு வெள்ளமும் வறட்சியும்ஏற்படும்போது மட்டுமே நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து பேசுவதும், பிறகு அதை மறந்து விடுவதும் வழக்கமாகி விட்டது.
இனி அவ்வாறு நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது. நதி நீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முயற்சிமேற்கொள்ளப்பட வேண்டும். இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு தடைகளை நாம் கடக்க வேண்டும்.
இந்தத் தடைகள் அனைத்தையும் முறியடித்து நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டியதுமிகவும் அவசியமாகும்.
வெள்ளம், கடும் வறட்சி ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும். இதற்கு நதி நீர்இணைப்புத் திட்டம் தான் சிறந்த தீர்வாக அமையும்.
உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 15 சதவீதம்.ஆனால் உலக கச்சா எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்தியில்இந்தியாவின் பங்கு வெறும் 0.8 சதவீதம் மட்டுமே. எனவே எரிசக்தி உற்பத்தியில் 2030ம் ஆண்டுக்குள் நமது நாடுதன்னிறைவை பெறவேண்டியது மிகவும் அவசியமாகும்.
இதே போல மின் உற்பத்தியையும் நாம் அதிகரிக்க வேண்டும். நகரங்களில் குவியும் திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்ய தீவிர முயற்சி தேவை. மேலும் அணுமின் உற்பத்தியையும் 10 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றார் கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications