ரவுடிகளை கைது செய்ய கோரி காவல் நிலையம் முற்றுகை
ஆத்தூர்:
சேலத்தில் ரவுடிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ளது புங்கவாடி கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.இந்த கிராமத்தை சேர்ந்த வின்சென்ட், அழகேசன், அங்குராஜ், செந்தில், கங்காதுரை, மணி, பெரியசாமி, சின்னசாமி, சுப்பிரமணிஉள்பட 12 பேர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பெண்களை கேலி கிண்டல் செய்து வந்தனர்.
மேலும் சாலையில் சுற்றித்திரியும், ஆடு-கோழிகளை கொன்று சமைத்து சாப்பிட்டு வந்தனர். இதை தட்டிக்கேட்பவர்களைபெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்தனர். இந்த ரவுடிகளின் தொல்லையால் அந்த கிராமத்தில்வசிக்கும் பெண்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர்.
இந்த பகுதியை சேர்ந்த செல்வி (வயது 30) என்பவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த கும்பல் செல்வியைமானபங்கம் செய்தனர். இதனால் அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு முருகேசன், ரவிச்சந்திரன், விஜயகுமார்,பெத்துசாமி, வேலு ஆகியோர் ஓடி வந்தனர். அவர்கள் ரவுடிகளிடம் தட்டி கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் முருகேசன் உள்பட 5 பேரும்படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் சுமார் 200 பேர் திரண்டு ஆத்தூர் போலீஸ்நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால் திடீரென்று அவர்கள் போலீஸ் நிலையத்தைமுற்றுகையிட்டு புங்கவாடி கிராமத்தில் அராஜகம் செய்து வரும் ரவுடிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோஷம் போட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பிறகு இன்ஸ்பெக்டர் சிங்குராஜ்விரைந்து வந்து ரவுடிகளை கைது செய்வதாக உறுதியளித்தபின் கலைந்து சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications