புழல் ஏரி திறப்பு: வெள்ளத்தில் சிக்கிய 50 கிராமம்
சென்னை:
புழல் ஏரி திறக்கப்பட்டதால் மணலி, திருவொற்றியூரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தொடர்ந்து 3வதுநாளாக தத்தளிக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி நிரம்பி வழிவந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு மதகுகள் திறக்கப்பட்டுஉபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம்,வடகரை, கொசப்பூர், ஆமுல்லைவாயல்,வைக்காடு உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.இரவு நேரத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. வாகனங்கள்செல்வதில் தடை ஏற்பட்டதால் படகுகள் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
சடையன் குப்பம் கிராமத்தை சேர்ந்த தியாகு, சங்கர் ஆகிய இருவரும் வெள்ளத்தில் மூழ்கிய சாலையைக் கடக்கும் போதுதண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதில் சங்கரின் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. தியாகுவின்சடலத்தை படகுகள் மூலம் மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் சாலையைக்கடப்பதை தவிர்க்கும் வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்து உள்ளனர். சென்னைஉரத் தொழிற்சாலை அருகே மார்பளவு தண்ணீர் செல்கிறது. எனவே மணலி, திருவொற்றியூரில் இருந்து பொன்னேரி செல்லும்வாகனப் போக்குவரத்து மூன்றாவது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது.
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் 2 நாளில் இப்பகுதிகளில்வெள்ளம் வடியும் என எதிர்பார்ப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications