திருவண்ணாமலை கோவில் கலசங்களைவீட்டுக்கு எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள்!
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இரு தொழிலதிபர்கள் காணிக்கையாக கொடுத்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளிக் கலசங்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பலரும் பல்வேறு வகையான காணிக்கையை அளிப்பது வழக்கம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 2 தொழிலதிபர்கள் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிக் கலசங்களைக் காணிக்கையாக கொடுத்தனர்.
இவை முக்கிய விழாக்களின்போது உற்சவரான சந்திரசேகருக்கு அணிவிக்கப்பட்டு காட்சி தருவது வழக்கம். இந்தக் கலசங்கள் கோவில் சிவாச்சாரியார்களின் பொறுப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் புதிய துணை ஆணையராக வாசுநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையடுத்து புதிய அறங்காவலர் குழுவும் நியமிக்கப்பட்டது.
அறங்காவலர் குழுத் தலைவராக தனுஷு, அறங்காவலர்களாக மணிபாரதி, பானுமதி அருணகிரி, கோவிந்தன், சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் கோவிலின் முக்கிய சாவிகளாக மொத்தம் 155 சாவிகள் ஒப்படைக்கப்பட்டன
கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறங்காவலர் குழுவினரும், துணை ஆணையர் வாசுநாதனும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சரியாக இருக்கிறதா என்று சோதனையிட்டனர். அப்போது, சிவாச்சாரியார்கள் பொறுப்பில் இருந்த, தொழிலதிபர்கள் கொடுத்த தங்க, வெள்ளிக் கவசங்கள் கணக்கில் வராதது தெரிய வந்தது.
கோவிலுக்குச் சொந்தமான பொருட்களின் பட்டியலிலும் அவை இடம் பெறவில்லை.
இதுகுறித்து சிவாச்சாரியார்களிடம் விசாரித்தபோது, கோவில் மூலமாக அவை தரப்படவில்லை என்றும் நேரடியாக சிவாச்சாரியார்களிடம் வழங்கப்பட்டது தெரிய வந்தது.
மேலும் அவற்றை சிவாச்சாரியார்கள் 2 வாரங்களுக்கு முன்பு தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகையை சிவாச்சாரியார்கள் எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம், அவை தற்போது எந்த நிலையில் உள்ளன, எங்கே உள்ளன, இப்படி எடுத்துச் செல்லப்பட்டது அந்த தொழிலதிபர்களுக்குத் தெரியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அருணாச்சலேஸ்வரருக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க, வெள்ளிக் கவசங்கள் கோவிலில் இல்லாததும், சிவாச்சாரியார்கள் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றதும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications