விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் கொலை-ஒரத்தநாட்டில் கலவரம்
ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.
ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉழூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற ராஜீவ்காந்தி (வயது 26). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்தார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக அடிக்கடி போராட்டம் நடத்தி வந்தார். இவர் மீது இன்னொரு ஜாதியைச் சேர்ந்த சிலர் காட்டத்துடன் இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அங்குள்ள கருவக்காடு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாரியப்பன் தூக்கில் பிணமாக தொங்கினார்.அவரது உடம்பில் ரத்தக் காயம் காணப்பட்டது.
தகவல் அறிந்ததும் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முருகானந்தம் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். மாரியப்பன் கொலை செய் யப்பட்டுவிட்டார் என்ற தகவலை தொடர்ந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
இதற்கிடையே தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள கடைகளை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. கடைகள் சூறையாடப்பட்டதால் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு ஓடினர். அக்கும்பல் கடைகளை மூடச்சொல்லி வியாபாரிகளை வற்புறுத்தினர்.
மேலும் சாலையில் சென்ற வாகனங் களையும் வழிமறித்தனர். சிலர் கல்வீசிலும் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையில் திரண்ட 500 பேர் தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட எஸ்.பி. அமித்குமார்சிங் வர வேண்டும், விசாரணை நடத்த வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்ததால் பரபரப்பு நிலவியது.
மேலஉழூர் கிராமத்தில் கலவரம் ஏதும் மூளாமல் இருக்கவும், பதட்டத்தை தணிக்கவும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications