மதுரை காவல் நிலையம் எதிரே 2 பேர் வெட்டிப் படுகொலை
மதுரை: மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் எதிரே ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ள இரு கொலைக் கைதிகள் இன்று பட்டப்பகலில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த மாடசாமி மற்றும் திருமலை வேலு ஆகிய இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெரியசாமி என்பவரைக் கொலை செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்கள்.
மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்று அவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மதுரையில் தங்கியிருந்து கையெழுத்துப் போட்டு வந்தனர் இருவரும். இன்று காலையும் வழக்கம் போல கையெழுத்துப் போட இருவரும் வந்தனர்.
காவல் நிலையம் எதிரே அவர்கள் வந்தபோது பத்து பேர் கொண்ட கும்பல் திடீரென பாய்ந்து வந்து அவர்களை மடக்கி சரமாரியாக அரிவாள்களால் வெட்டினர்.
இந்த சம்பவத்தைப் பார்த்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெறி தீரும் வரையில் இருவரையும் வெட்டிய அக்கும்பல் இருவரின் தலைகளையும் துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பட்டப் பகலில் பலர் முன்னிலையில், காவல் நிலையம் எதிரே நடந்த இந்த பயங்கர கொலையால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெரியசாமி கொலைக்கு பழிவாங்கும் வகையில் இந்த இரட்டைப் படுகொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
கொலைக் கும்பலைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications