சசிகலாவுக்கு எதிரான பொருளாதார குற்ற வழக்கு தள்ளுபடி
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீது வருமான வரித்துறையின், அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அன்னியச் செலாவாணி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 6.5.1996ம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சசிகலாவுக்கு மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் 10.05.96 அன்று விசாரணை கமிஷன் முன்பு நேரில் ஆஜராக வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.
இதற்கு சசிகலா தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் ஆஜராக முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அன்னிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 40(3)ன் கீழ் சசிகலாவின் மீது எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சசிகலா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் இறுதிகட்ட விசாரணை நேற்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, சசிகலாவுக்கு எதிராக மத்திய அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கை ரத்துச் செய்து உத்தரவிட்டார்.
அவர் அளித்த தீர்ப்பில், மத்திய அமலாக்கப் பிரிவானது மீண்டும் 30.05.96 அன்று சம்மனை அனுப்பியுள்ளது. அதனை ஏற்று 20.06.96 அன்று சசிகலா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அந்த வழக்கில் சசிகலா கைதும் செய்யப்பட்டுள்ளார். எனவே சசிகலா சம்மனை மதிக்கவில்லை என்று கோரி வழக்கு தொடர்ந்தது ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications