ஸ்வைன்: பெங்களூரில் மேலும் 2 பேர் பலி-சட்டீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர் சாவு

பெங்களூரில் நாகரபாவியைச் சேர்ந்த சிவண்ணா (55) என்பவரும், ஒய்ட்பீல்டு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (28) என்ற வாலிபரும் நேற்று இரவு பலியாயினர். இதன்மூலம் பெங்களூரில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சிவண்ணா ராஜாஜிநகரில் உள்ள ஒர்க்ஹார்ட் மருத்துவமனையிலும் மஞ்சுநாத் ஒயிட்பீல்டில் உள்ள வைதேகி மருத்துவமனையிலும் பலியாயினர்.
பிலாஸ்பூரில் மத்திய ரிசவ்ர் டையைச் சேர்ந்த 40 வயது வீரர் இந்த நோய்க்கு நேற்று பலியானார்.
இதுவரை இந்த நோய்க்கு புனேவில் 15 பேரும், பெங்களூர், மும்பையில் தலா 3 பேரும், சென்னை, அகமதாபாத், வதோதரா, திருவனந்தபுரம், நாசிக், ராய்ப்பூரில் தலா இருவரும், பிலாஸ்பூரில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,398 ஆக உயர்ந்துள்ளது. இதில் 125 பேர் நேற்று இந்த நோயுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 29 பேர் மும்பையிலும் 4 பேர் புனேவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, ஹைதராபாத்தில் தலா 13 பேரும், அகமதாபாத், சூரத்தில் தலா 5 பேரும்,
பெங்களூரில் 9 பேரும், கொல்கத்தாவில் 6 பேரும், ஓஸ்மான்பாத்தில் 4 பேரும், சென்னை, புதுச்சேரியில் தலா 3 பேரும், நதேத், நாக்பூர், மங்களூர், கோவா, ஸ்ரீநகர், ஹூப்ளியில் தலா 2 பேரும், துலே, நாசிக், லாத்தூர், பஞ்குலா நகர்களில் தலா ஒருவரும் நேற்று இந்த நோயுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 டாக்டர்களுக்கு ஸ்வைன்:
கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன், ஆயுர்வேத டாக்டர்களான ராகுல் சூர்யா, கேசவ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் புனே நகரில் இருந்து ஹூப்ளி வந்தவர்கள் ஆவர்.
உறியடி நிகழ்ச்சிகள் ரத்து:
மகாராஷ்ரத்தில் ஜென்மாஷ்டமி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இப்போது பன்றி காய்ச்சல் பரவியுள்ள நிலையில் புனே நகரில், ஜென்மாஷ்டமி திருவிழாவையொட்டி நடக்கும் உறியடி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
புனே-இறந்த 3 பேருக்கு ஸ்வைன் இல்லை..
இதற்கிடையே புனே நகரில் இறந்த 8 மாதக் குழந்தை உள்ளிட்ட 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்று தெரியவந்துள்ளதாக அம் மாவட்ட கலெக்டர் சந்திரகாந்த் தாஸ்வி தெரிவித்துள்ளார்.
சுவாபிமான் காம்ளே என்ற 8 மாதத் குழந்தை, பாரதி கோயல், கெளதம் ஆகிய மூவரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்று சோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications